ஒரு வார்த்தையால் வளர்ந்த புரட்சி!

கல் போன்ற நெஞ்சத்திலும் 
கண்ணீரை காண வைத்த புரட்சி!
 
மார்க்கம் மலர்வதற்கு முன்
சண்டையால் சாதித்த சமுதாயம்;
மலர்ந்தப்  பின் 
சலாம் என்ற ஒரு வார்த்தையால் வளர்ந்த புரட்சி!
 
கட்டிப் போடும் வட்டி இல்லை;
மதி மயக்கும் மதுவும் இல்லை;
 
எதிரிகளின் மடி கலங்க வைக்கும் வீரம் இருந்தாலும்
மற்றற மன்னவன் முன் மண்டியிட வைத்த மாபெரும் புரட்சி!
 
இறுகிப் போன இதயத்தின் உள்ளே;
உன் சகோதரனை கண்டு சிரித்தாலே
தர்மம் என தம்பட்டம் அடித்த புரட்சி!
 
அடிமட்ட சமுதாயத்தை
அடியோடு திருப்பிப் போட்ட எம் பெருமானாரின்
மாபெரும் புரட்சி!
 
அடிமை இல்லை;ஆணவம் இல்லை;
பொறுமை உண்டு; கோழை இல்லை;
மலர்ந்தது மக்காவிலே;
வீசிய வாசத்தில் வசப்பட்ட மாபெரும் புரட்சி!
கல் போன்ற நெஞ்சத்திலும் 
கண்ணீரை காண வைத்த புரட்சி!
 
மார்க்கம் மலர்வதற்கு முன்
சண்டையால் சாதித்த சமுதாயம்;
மலர்ந்தப்  பின் 
சலாம் என்ற ஒரு வார்த்தையால் வளர்ந்த புரட்சி!
 
கட்டிப் போடும் வட்டி இல்லை;
மதி மயக்கும் மதுவும் இல்லை;
 
எதிரிகளின் மடி கலங்க வைக்கும் வீரம் இருந்தாலும்
மற்றற மன்னவன் முன் மண்டியிட வைத்த மாபெரும் புரட்சி!
 
இறுகிப் போன இதயத்தின் உள்ளே;
உன் சகோதரனை கண்டு சிரித்தாலே
தர்மம் என தம்பட்டம் அடித்த புரட்சி!
 
அடிமட்ட சமுதாயத்தை
அடியோடு திருப்பிப் போட்ட எம் பெருமானாரின்
மாபெரும் புரட்சி!
 
அடிமை இல்லை;ஆணவம் இல்லை;
பொறுமை உண்டு; கோழை இல்லை;
மலர்ந்தது மக்காவிலே;
வீசிய வாசத்தில் வசப்பட்ட மாபெரும் புரட்சி!

No comments:

Post a Comment