ஊசிவெடியாய் இருப்பது மேல்!!

எங்கோ!
ஒர் மூலையில்
ஈரக்குலைகளின் கதறல்கள்!!
கேட்பாருண்டு
கொடுப்பாரில்லை;
 
பத்திரிக்கைகள்
பசியைத் தீர்க்க
பக்கம் பக்கமாய்
எழுதி தீர்த்தாலும்
சுடாது எங்கள்
சுரணைக் கெட்ட சமூகத்திற்கு!!
 
மரத்துப் போன
மனதிற்கு
மருந்து இல்லை;
அடிப்பட்டால்
அதிகப் பட்சமாக
அலறல் சப்தம் மட்டுமே!!
 
கற்களைக் கொண்டு
களத்திற்கு சென்று
காவியம் படைக்கும்
புது சரித்திரம்
தீராத எங்கள் நாட்டிற்கு வந்த தரித்திரம்!!
 
வீழ்ந்துக் கிடக்கும் கட்டிடங்களை
எழுப்ப உண்டு நிதி;
அன்னியர்களின்
அரவணைப்பால்
அடகுவைத்த
அரபிகளின் மதி!!
 
எங்கள் குடல்களே 
எங்களை திண்ணும்
புதுவித விருந்து;
என்றுதான் கிடைக்குமோ 
வலிக்கு மருந்து!!!
 
ஆண்டு ஆண்டுக் காலமாய்
அடித்து துரத்தினாலும்
ஒடாது எங்கள்
பாதம் இந்த மண்ணைவிட்டு!
முடியாவிட்டால்
முத்தமிடுவோம் 
மரணத்தைத் தொட்டு!!!
 
உரிமையை இழந்து
ஊமையாய் இருப்பதை விட
ஊசிவெடியாய் இருப்பது மேல்!!!
எங்கோ!
ஒர் மூலையில்
ஈரக்குலைகளின் கதறல்கள்!!
கேட்பாருண்டு
கொடுப்பாரில்லை;
 
பத்திரிக்கைகள்
பசியைத் தீர்க்க
பக்கம் பக்கமாய்
எழுதி தீர்த்தாலும்
சுடாது எங்கள்
சுரணைக் கெட்ட சமூகத்திற்கு!!
 
மரத்துப் போன
மனதிற்கு
மருந்து இல்லை;
அடிப்பட்டால்
அதிகப் பட்சமாக
அலறல் சப்தம் மட்டுமே!!
 
கற்களைக் கொண்டு
களத்திற்கு சென்று
காவியம் படைக்கும்
புது சரித்திரம்
தீராத எங்கள் நாட்டிற்கு வந்த தரித்திரம்!!
 
வீழ்ந்துக் கிடக்கும் கட்டிடங்களை
எழுப்ப உண்டு நிதி;
அன்னியர்களின்
அரவணைப்பால்
அடகுவைத்த
அரபிகளின் மதி!!
 
எங்கள் குடல்களே 
எங்களை திண்ணும்
புதுவித விருந்து;
என்றுதான் கிடைக்குமோ 
வலிக்கு மருந்து!!!
 
ஆண்டு ஆண்டுக் காலமாய்
அடித்து துரத்தினாலும்
ஒடாது எங்கள்
பாதம் இந்த மண்ணைவிட்டு!
முடியாவிட்டால்
முத்தமிடுவோம் 
மரணத்தைத் தொட்டு!!!
 
உரிமையை இழந்து
ஊமையாய் இருப்பதை விட
ஊசிவெடியாய் இருப்பது மேல்!!!

No comments:

Post a Comment