போகமாட்டார்கள் புது ஆளிடம்....


அன்னை இருக்கிறாள்;
தந்தை இருக்கிறார்;
மனைவி இருக்கிறாள்;
நானும் இருக்கிறேன் 
வெகு தொலைவில்!

அள்ளி முத்தமிடவேண்டிய
என் பிஞ்சு குழந்தையைத் 
தொட்டு தடவி பார்த்தேன்;
புகைப்படத்தில்!

மழலையின் குரலைக்
கைபேசியில் கேட்டுக்
கதறி அழுதது என் மனம்;
விழிகளின் வழியாக;
சப்தமே இல்லாமல்!

எதிர் திசையில் இருந்து 
ஒரு குரல் - அட குழந்தையின்
குரலைக் கேட்டு சந்தோசத்தை பாரு!

எல்லோரிடமும் பேசினேன்
எல்லோருக்கும் 
என் குழந்தையை
ப் பற்றியே பேச்சு; 
சந்தோசத்தில்!

கடைசிச் சுற்றாக வந்தது
என் மனைவியிடம்
அவள் மட்டும் கேட்டாள்;
எப்போ வருவிங்க"!!

என் குரல்வளையில்
யாரோ நெரிப்பது போல!
என் குரலை என்னாலேக்
கேட்க முடியவில்லை!

கனைத்து விட்டுச் 
சொன்னேன்;
உங்களுக்காகத்தானே !
போய்விடலாமா 
என தோன்றியது உள்ளத்தில்!
கடைசியாக ஒரு வருடம்;
என ஆறுதல் சொன்னது என் மனம்!!!

கடைசியாக முடிவு 
எடுத்தே விட்டேன் நான்;
நாட்டிற்கு செல்ல!
இனியும் தாமதிக்க முடியாது;
காரணம்;
கம்பெனியில் முடிந்து விட்டது 
என் வயது வரம்பு!

ஊருக்கு சென்றேன் நான் ,
மூட்டை முடிச்சுடன் - கூடவே 
மூட்டு வழியும் முதுகு வலியும்!!!

என் இளமையெல்லாம்
பாலைவனத்தில்  விட்டு விட்டு;
வீடு திரும்பினேன்;
விழி
ப் பிதிங்கினேன் 
களவுக் கொடுத்தக் கணவனாய்!!!

புகைப்படத்திலே
ப் 
பார்த்துப் பார்த்துப் பழகிய 
என் பிள்ளைகள்;
இப்போதும் பார்கிறார்கள்;
அப்படியே ! 
தூரத்தில் வைத்து.......

கண்களில் பிரகாசத்தோடு;
கைகளை நீட்டி அழைத்தேன் அவர்களை;
உள்ளே இருந்து  என் மனைவியின்  குரல்;
போகமாட்டார்கள்  புது ஆளிடம் ?????

அன்னை இருக்கிறாள்;
தந்தை இருக்கிறார்;
மனைவி இருக்கிறாள்;
நானும் இருக்கிறேன் 
வெகு தொலைவில்!

அள்ளி முத்தமிடவேண்டிய
என் பிஞ்சு குழந்தையைத் 
தொட்டு தடவி பார்த்தேன்;
புகைப்படத்தில்!

மழலையின் குரலைக்
கைபேசியில் கேட்டுக்
கதறி அழுதது என் மனம்;
விழிகளின் வழியாக;
சப்தமே இல்லாமல்!

எதிர் திசையில் இருந்து 
ஒரு குரல் - அட குழந்தையின்
குரலைக் கேட்டு சந்தோசத்தை பாரு!

எல்லோரிடமும் பேசினேன்
எல்லோருக்கும் 
என் குழந்தையை
ப் பற்றியே பேச்சு; 
சந்தோசத்தில்!

கடைசிச் சுற்றாக வந்தது
என் மனைவியிடம்
அவள் மட்டும் கேட்டாள்;
எப்போ வருவிங்க"!!

என் குரல்வளையில்
யாரோ நெரிப்பது போல!
என் குரலை என்னாலேக்
கேட்க முடியவில்லை!

கனைத்து விட்டுச் 
சொன்னேன்;
உங்களுக்காகத்தானே !
போய்விடலாமா 
என தோன்றியது உள்ளத்தில்!
கடைசியாக ஒரு வருடம்;
என ஆறுதல் சொன்னது என் மனம்!!!

கடைசியாக முடிவு 
எடுத்தே விட்டேன் நான்;
நாட்டிற்கு செல்ல!
இனியும் தாமதிக்க முடியாது;
காரணம்;
கம்பெனியில் முடிந்து விட்டது 
என் வயது வரம்பு!

ஊருக்கு சென்றேன் நான் ,
மூட்டை முடிச்சுடன் - கூடவே 
மூட்டு வழியும் முதுகு வலியும்!!!

என் இளமையெல்லாம்
பாலைவனத்தில்  விட்டு விட்டு;
வீடு திரும்பினேன்;
விழி
ப் பிதிங்கினேன் 
களவுக் கொடுத்தக் கணவனாய்!!!

புகைப்படத்திலே
ப் 
பார்த்துப் பார்த்துப் பழகிய 
என் பிள்ளைகள்;
இப்போதும் பார்கிறார்கள்;
அப்படியே ! 
தூரத்தில் வைத்து.......

கண்களில் பிரகாசத்தோடு;
கைகளை நீட்டி அழைத்தேன் அவர்களை;
உள்ளே இருந்து  என் மனைவியின்  குரல்;
போகமாட்டார்கள்  புது ஆளிடம் ?????

No comments:

Post a Comment