எப்போது விடுமுறை?

ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தாலும்
என் மூளையில் இருப்பதென்னவோ நீதான்!

தொடமுடியாத தூரத்தில் நீ
தொட்டுப் பார்க்கும் என் விரல்கள் உன் கடிதத்தை!!

நிழாலாய் உன்
நினைவுகள் - இங்கே
கனவுகளோடு
காலம் தள்ளும் உன்
கணவன்!

இருக்க இடம் எங்கே என்று நீ கேட்க ;
படுப்பதற்க்கு மட்டுமே இடம் என்று நான் உரைக்க
பதறிப் போனாய் நீ!

குடும்பத்தோடு இருந்தும்
தனிமையாய் நீ அங்கே;
குடும்பத்திற்காகவே தனிமையாய்
நான் இங்கே!!

அருகில் வரவே
இனிப்புகள் இலஞ்சமாய்
என் குழந்தைக்கு;
வாங்கவும் மறுக்கிறான்
வரவும் மறுக்கிறான்;

வெடித்துப் போய்
விளக்கம் கேட்டால்;
கத்திச் சொன்னான்
அடிப்பாள் அம்மா
கண்டவரிடம் வாங்கினாள்!

வரும் உன் அழைப்பையும் துண்டித்து விட்டு
கூடவே கொஞ்சம் கண்டித்துவிட்டு
பேசக் கூட நேரமில்லை என்று
வேலையில் நான்;
கண்ணீரோடு கனைத்துவிட்டு
மெதுவாய் நீ கேட்பாய்;
எப்போது விடுமுறை என்று!!


இப்படி
மலறும் நினைவுகளோடு
கதறும் உள்ளம்;
சுடும் கண்ணிரோ
என் தலையணையை நனைக்க
முடிவெடுத்துவிட்டேன் இனி
போதாது எனக்கு ஒரு தலையணை என்று!!
ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தாலும்
என் மூளையில் இருப்பதென்னவோ நீதான்!

தொடமுடியாத தூரத்தில் நீ
தொட்டுப் பார்க்கும் என் விரல்கள் உன் கடிதத்தை!!

நிழாலாய் உன்
நினைவுகள் - இங்கே
கனவுகளோடு
காலம் தள்ளும் உன்
கணவன்!

இருக்க இடம் எங்கே என்று நீ கேட்க ;
படுப்பதற்க்கு மட்டுமே இடம் என்று நான் உரைக்க
பதறிப் போனாய் நீ!

குடும்பத்தோடு இருந்தும்
தனிமையாய் நீ அங்கே;
குடும்பத்திற்காகவே தனிமையாய்
நான் இங்கே!!

அருகில் வரவே
இனிப்புகள் இலஞ்சமாய்
என் குழந்தைக்கு;
வாங்கவும் மறுக்கிறான்
வரவும் மறுக்கிறான்;

வெடித்துப் போய்
விளக்கம் கேட்டால்;
கத்திச் சொன்னான்
அடிப்பாள் அம்மா
கண்டவரிடம் வாங்கினாள்!

வரும் உன் அழைப்பையும் துண்டித்து விட்டு
கூடவே கொஞ்சம் கண்டித்துவிட்டு
பேசக் கூட நேரமில்லை என்று
வேலையில் நான்;
கண்ணீரோடு கனைத்துவிட்டு
மெதுவாய் நீ கேட்பாய்;
எப்போது விடுமுறை என்று!!


இப்படி
மலறும் நினைவுகளோடு
கதறும் உள்ளம்;
சுடும் கண்ணிரோ
என் தலையணையை நனைக்க
முடிவெடுத்துவிட்டேன் இனி
போதாது எனக்கு ஒரு தலையணை என்று!!

No comments:

Post a Comment