ஆறுதலாய் உள்ளது...

கனமான நெஞ்சத்தால்
குளமாயின கண்கள்;
நீங்காத உன்
நினைவுகளால்
தூங்காத என் விழிகள்!!
 
 
ஏங்காத நாளில்லை
எப்போது என் விடுமுறை
என்று!
 
 
வறண்ட பாலை நாட்டில்
புறண்டு புறண்டுப் படுத்தாலும்
பொழுது என்னவோ நமக்கு மட்டும்
இன்னும் விடியாமல்!!
 
 
ஒரிரு நாள்
மனக்கசப்பால் 
நாவு தடித்தாலும்; 
தழும்பாய் உன் நினைவுகளுக்கு மட்டும்
நீங்கா இடம்!!   
 
 
இனியொருமுறை
கலங்காதே
கைப்பேசியில்;
சமாதானம் செய்யவே
சம்பளம் போதாது!!
 
 
முத்தம் கொடுக்க
முனைந்தாலும்
முதலில்
முட்டுவதென்னவோ
கைப்பேசிதான்!!
 
 
அலட்டிக்கொள்ளும் மனதிற்கும்
ஆறுதலாய்தான் உள்ளது;
“வாய்ப்” நமக்கெல்லாம் நல்ல
வாய்ப்பாக ஆனதை எண்ணி!!
கனமான நெஞ்சத்தால்
குளமாயின கண்கள்;
நீங்காத உன்
நினைவுகளால்
தூங்காத என் விழிகள்!!
 
 
ஏங்காத நாளில்லை
எப்போது என் விடுமுறை
என்று!
 
 
வறண்ட பாலை நாட்டில்
புறண்டு புறண்டுப் படுத்தாலும்
பொழுது என்னவோ நமக்கு மட்டும்
இன்னும் விடியாமல்!!
 
 
ஒரிரு நாள்
மனக்கசப்பால் 
நாவு தடித்தாலும்; 
தழும்பாய் உன் நினைவுகளுக்கு மட்டும்
நீங்கா இடம்!!   
 
 
இனியொருமுறை
கலங்காதே
கைப்பேசியில்;
சமாதானம் செய்யவே
சம்பளம் போதாது!!
 
 
முத்தம் கொடுக்க
முனைந்தாலும்
முதலில்
முட்டுவதென்னவோ
கைப்பேசிதான்!!
 
 
அலட்டிக்கொள்ளும் மனதிற்கும்
ஆறுதலாய்தான் உள்ளது;
“வாய்ப்” நமக்கெல்லாம் நல்ல
வாய்ப்பாக ஆனதை எண்ணி!!

No comments:

Post a Comment