வெள்ளையன் ஓடியப்பின்னும்..




வெள்ளையன்
ஓடியப்பின்னும்
உட்கார்ந்து இருக்கும்
தலை வலி;
அவனது மொழி!

நேர்முகக்கானலிலும்
கோணலாய் ஆகும்
குளறுப்படி ஆங்கிலம்!

உள்ளங்கை வியர்க்க
நெஞ்சுப் படப் படக்க
மொழியை அறிவாக்கி
எங்கள் வழியை இருளாக்கி;
தொலைத் தூரத்தில் பிரகாசம்!

பேச நினைத்தாலும்
பாசக்கார நண்பர்கள்
சிரித்துத் தொலைப்பார்கள்
என்னை வறுத்தெடுப்பார்கள்! 

பயிற்சிக்கு தயாராகி
பேசிப் பார்ப்போம் ;
இல்லை இல்லை
நகைத்துப் பார்ப்போம்!

மொழி அறிவை
முகத்திலும் காட்டினேன்;
முடிவில் வென்றும் காட்டினேன்;
பாடி லாங்குவேஜ் உண்மையிலே
கைக்கொடுக்கும் பாதி லாங்குவேஜ்!



வெள்ளையன்
ஓடியப்பின்னும்
உட்கார்ந்து இருக்கும்
தலை வலி;
அவனது மொழி!

நேர்முகக்கானலிலும்
கோணலாய் ஆகும்
குளறுப்படி ஆங்கிலம்!

உள்ளங்கை வியர்க்க
நெஞ்சுப் படப் படக்க
மொழியை அறிவாக்கி
எங்கள் வழியை இருளாக்கி;
தொலைத் தூரத்தில் பிரகாசம்!

பேச நினைத்தாலும்
பாசக்கார நண்பர்கள்
சிரித்துத் தொலைப்பார்கள்
என்னை வறுத்தெடுப்பார்கள்! 

பயிற்சிக்கு தயாராகி
பேசிப் பார்ப்போம் ;
இல்லை இல்லை
நகைத்துப் பார்ப்போம்!

மொழி அறிவை
முகத்திலும் காட்டினேன்;
முடிவில் வென்றும் காட்டினேன்;
பாடி லாங்குவேஜ் உண்மையிலே
கைக்கொடுக்கும் பாதி லாங்குவேஜ்!

பாதியில் வந்தாலும்..


கனவென்றுத்  தெரிந்தும்
விழிகளை விலக்க மாட்டேன்;
இருக்கிறது இன்னும்
அரைமணி குளியலறைக்கு
அலுவலகத்திற்க்காக!

சண்டைப் போட்டாலும்
தொண்டையில் சிக்கும்;
உன் நினைவால்
வலையில் தடுமாறி
விழுந்தாலும் தூண்களாக
உன் நினைவலை!

அந்நிய நாட்டில்
அந்நியமாய் நான்;
அந்நியோன்மாய் இருந்த நாமோ
அகதிகளாய்;
நீ மறுவீட்டில்
நான் மறுநாட்டில்!

இந்த முறை உனக்கு
இரண்டு வளையல்கள்;
அழகாய் சிரிப்பாய்;
விற்ற 15 சவரனை  மறந்து!

என் மனம் புரிந்து
கனம் கொடுப்பாய்;
குணம் தெரிந்து
ரணம் நீக்குவாய்!

பாதியில் வந்தாலும்
புரியாத புதிராய் உன்
பாசம்!

மனம் நிறைய ஆசைக் கொண்டு
மறைக்காதீர்கள் இனியும்;
கொட்டிதீர்த்துவிடுங்கள்
கொப்பளிக்கும் அன்பை!

கனவென்றுத்  தெரிந்தும்
விழிகளை விலக்க மாட்டேன்;
இருக்கிறது இன்னும்
அரைமணி குளியலறைக்கு
அலுவலகத்திற்க்காக!

சண்டைப் போட்டாலும்
தொண்டையில் சிக்கும்;
உன் நினைவால்
வலையில் தடுமாறி
விழுந்தாலும் தூண்களாக
உன் நினைவலை!

அந்நிய நாட்டில்
அந்நியமாய் நான்;
அந்நியோன்மாய் இருந்த நாமோ
அகதிகளாய்;
நீ மறுவீட்டில்
நான் மறுநாட்டில்!

இந்த முறை உனக்கு
இரண்டு வளையல்கள்;
அழகாய் சிரிப்பாய்;
விற்ற 15 சவரனை  மறந்து!

என் மனம் புரிந்து
கனம் கொடுப்பாய்;
குணம் தெரிந்து
ரணம் நீக்குவாய்!

பாதியில் வந்தாலும்
புரியாத புதிராய் உன்
பாசம்!

மனம் நிறைய ஆசைக் கொண்டு
மறைக்காதீர்கள் இனியும்;
கொட்டிதீர்த்துவிடுங்கள்
கொப்பளிக்கும் அன்பை!

கவிதை திருட்டு ..





நான் கசக்கி எடுத்தக் கவிதையில்
வசதியாய் செதிக்கிக் கொண்டாய்
உன் பெயரை!

வலிக்கொண்ட என் உளிக்கு
ரணமாய் உன் பெயர்;
மறந்து இட்டுருப்பாயோ
அல்லது
உன் நேசங்களுக்காக
மருந்து இட்டுருப்பாயோ!

அரை மணி செலவழித்த
என் கவிதைக்கு
அரை நொடியில் உன் பெயர்!

பார்த்து பார்த்து எழுதியக் காலம்
காலமாகிவிட்டதோ;
என் பரிட்சைப் பேப்பரில்
இலகுவாக உன் பதிவு எண்!




நான் கசக்கி எடுத்தக் கவிதையில்
வசதியாய் செதிக்கிக் கொண்டாய்
உன் பெயரை!

வலிக்கொண்ட என் உளிக்கு
ரணமாய் உன் பெயர்;
மறந்து இட்டுருப்பாயோ
அல்லது
உன் நேசங்களுக்காக
மருந்து இட்டுருப்பாயோ!

அரை மணி செலவழித்த
என் கவிதைக்கு
அரை நொடியில் உன் பெயர்!

பார்த்து பார்த்து எழுதியக் காலம்
காலமாகிவிட்டதோ;
என் பரிட்சைப் பேப்பரில்
இலகுவாக உன் பதிவு எண்!

குடும்பத்திற்காக...


மூட்டைப் பூச்சியும்
செல்லாத;
நாங்கள் நாட்டுக்கு
சொல்லாத குருவிக் கூண்டு!

தினமும் குளித்தாலும்
குளிக்காமல் தோற்றமளிக்கும்
குளியளறை கறையுடன்!

குப்பைக் கூடையிலும்
புலன்விசாரணை
எச்சில் டப்பாவுக்கு!

மடிக்கணினியை மடியில் சுமந்து
மனதில் ஆசையை சுமந்து
காதோடு பேசினாலும்
சப்தமாய் விழும்;
நித்தமும் நடப்பதால்
வெட்கம் விட்டுப் போகும்!

ஒருத் துளி வியர்வையும்
ஒவ்வாது என் ஊரில்;
இங்கே மணமாகிப் போனது
உள்ளம் ரணமாகிப் போனதால்!

தியாகங்கள் சாகாமல்
காப்பாற்றும் தியாகிகள்
நாங்கள்!
பொறிக்கப்படாத வரலாற்றுக்கு
பொக்கிஷமாய்  என்னைப் போன்ற
சகோதரர்கள்!

எல்லாம் தெரிந்தும்
எங்களுக்கான இடம் இதுதான்;
ஒற்றைவரியில் விளக்க 
ஒருவரிப் பதில்
"குடும்பத்திற்காக"

மூட்டைப் பூச்சியும்
செல்லாத;
நாங்கள் நாட்டுக்கு
சொல்லாத குருவிக் கூண்டு!

தினமும் குளித்தாலும்
குளிக்காமல் தோற்றமளிக்கும்
குளியளறை கறையுடன்!

குப்பைக் கூடையிலும்
புலன்விசாரணை
எச்சில் டப்பாவுக்கு!

மடிக்கணினியை மடியில் சுமந்து
மனதில் ஆசையை சுமந்து
காதோடு பேசினாலும்
சப்தமாய் விழும்;
நித்தமும் நடப்பதால்
வெட்கம் விட்டுப் போகும்!

ஒருத் துளி வியர்வையும்
ஒவ்வாது என் ஊரில்;
இங்கே மணமாகிப் போனது
உள்ளம் ரணமாகிப் போனதால்!

தியாகங்கள் சாகாமல்
காப்பாற்றும் தியாகிகள்
நாங்கள்!
பொறிக்கப்படாத வரலாற்றுக்கு
பொக்கிஷமாய்  என்னைப் போன்ற
சகோதரர்கள்!

எல்லாம் தெரிந்தும்
எங்களுக்கான இடம் இதுதான்;
ஒற்றைவரியில் விளக்க 
ஒருவரிப் பதில்
"குடும்பத்திற்காக"

தற்கொலை ...



பணம் இறுக்கம் கொண்டாய்
மனம் இறுக்கம் என்றாய்;
மரணத்தைக் கொன்றாய்
தற்கொலை என்றாய்!

மன அழுத்தம் கொண்டதால்
தொங்கவிட்டாய் உன் பாரத்தை
கயிற்றில்!

எல்லாம் முடிந்துவிடுமா
இங்கிருந்து சென்றுவிட்டால்;
முடியாத அவ்வுலகத்திலே
முட்டிக் கொண்டு நிற்பாய்!

மாநபி போதனைகள்
மறந்துவிட்டு சென்றால்;
மகத்தான நாளில் நீ
மகத்துவம் இழந்து நிற்பாய்!

பாரத்தை தாங்க
படைத்தவன் உண்டு;
எல்லாவற்றிக்கும் முதலில்
விதியை நம்பு!

இறுதி துவாவும்
கிடைக்காது உனக்கு;
இவ்வளவும் தெரிந்தும்
தற்கொலை எண்ணம்  எதுக்கு!

கண்ணீர் விட்டு
கதறு கருனையாளனிடம்;
எச்சோகம் கிடைத்தாலும்
வேண்டாம் இந்த நினைப்பு!


பணம் இறுக்கம் கொண்டாய்
மனம் இறுக்கம் என்றாய்;
மரணத்தைக் கொன்றாய்
தற்கொலை என்றாய்!

மன அழுத்தம் கொண்டதால்
தொங்கவிட்டாய் உன் பாரத்தை
கயிற்றில்!

எல்லாம் முடிந்துவிடுமா
இங்கிருந்து சென்றுவிட்டால்;
முடியாத அவ்வுலகத்திலே
முட்டிக் கொண்டு நிற்பாய்!

மாநபி போதனைகள்
மறந்துவிட்டு சென்றால்;
மகத்தான நாளில் நீ
மகத்துவம் இழந்து நிற்பாய்!

பாரத்தை தாங்க
படைத்தவன் உண்டு;
எல்லாவற்றிக்கும் முதலில்
விதியை நம்பு!

இறுதி துவாவும்
கிடைக்காது உனக்கு;
இவ்வளவும் தெரிந்தும்
தற்கொலை எண்ணம்  எதுக்கு!

கண்ணீர் விட்டு
கதறு கருனையாளனிடம்;
எச்சோகம் கிடைத்தாலும்
வேண்டாம் இந்த நினைப்பு!

ஈரமானப் பாலை...



தினந்தோறும் நீ கேட்பது
மனந்தோறும் மாறுக்கால்
போட்டு அமர்ந்திருக்கும்!

என்ன வேண்டுமென்றுக் கேட்டாலே
முதலில் என்னைச் சொல்வாய்;
பின்புதான் என்ன வேண்டுமென்றுச் சொல்லுவாய்!

கைப்பேசியில் தொடர்பறுந்தப் போதும்
தொடரும் நம் நினைவுகள்;
வைத்தப்பின்னும் பார்த்துக்கொண்டிருப்பேன்
உன் அழைப்புக்காக காத்துக்கொண்டிருப்பேன்!

வழக்கமான கேள்விகள்தான்
உண்டாயா உறங்கினாயா;
தினமும் நீ கேட்க இனிமையாக
இருக்கும் உள்ளம் குளுமையாக இருக்கும்!

முத்துக்கள் விழுந்த உன் பேச்சை
விளங்கிக் கொண்டே மீண்டும் விளிப்பேன்
புரியாததைப்போல் மீண்டும் கேட்பதற்கு!

நம் குழந்தையின் சிரிப்பை நான் கேட்க
நீ கொடுக்கும் சப்தம்;
சிரித்துக்கொள்வேன் முதல்
குழந்தையின் முணகலைக் கேட்டு!

வெத்துப் பாலையில்
ஒற்றையாய் நான் நிற்க
வெட்கமே இல்லாமல்
வியர்த்து விடும் என் விழிகள்
நீ இல்லாமல்!



தினந்தோறும் நீ கேட்பது
மனந்தோறும் மாறுக்கால்
போட்டு அமர்ந்திருக்கும்!

என்ன வேண்டுமென்றுக் கேட்டாலே
முதலில் என்னைச் சொல்வாய்;
பின்புதான் என்ன வேண்டுமென்றுச் சொல்லுவாய்!

கைப்பேசியில் தொடர்பறுந்தப் போதும்
தொடரும் நம் நினைவுகள்;
வைத்தப்பின்னும் பார்த்துக்கொண்டிருப்பேன்
உன் அழைப்புக்காக காத்துக்கொண்டிருப்பேன்!

வழக்கமான கேள்விகள்தான்
உண்டாயா உறங்கினாயா;
தினமும் நீ கேட்க இனிமையாக
இருக்கும் உள்ளம் குளுமையாக இருக்கும்!

முத்துக்கள் விழுந்த உன் பேச்சை
விளங்கிக் கொண்டே மீண்டும் விளிப்பேன்
புரியாததைப்போல் மீண்டும் கேட்பதற்கு!

நம் குழந்தையின் சிரிப்பை நான் கேட்க
நீ கொடுக்கும் சப்தம்;
சிரித்துக்கொள்வேன் முதல்
குழந்தையின் முணகலைக் கேட்டு!

வெத்துப் பாலையில்
ஒற்றையாய் நான் நிற்க
வெட்கமே இல்லாமல்
வியர்த்து விடும் என் விழிகள்
நீ இல்லாமல்!

திரையிட்டு வந்தேன்...


குறையேதுமில்லை
திரையிட்டு வந்தேன்;
உன் இச்சைக்கொண்ட
பார்வைக்கு எச்சில் துப்பி
எதிர்ப்பேன்!

அரைநிர்வாணம்
அழகாய் தோன்றும் உனக்கு;
உன் அக்காள் தங்கை
திறந்து வந்தால் 
முழுக்கோபம் எதற்கு!

மாற்றான் தோட்டத்து
மல்லிகை மட்டும்
மணக்கவேண்டும் உனக்கு;
மானங்கெட்ட மானிடனே
மனைவியை  
பூட்டிவைக்கிறாய் எதற்கு!

போர்த்தியிருக்கும் எங்களை
கழட்டச் சொல்லி கேட்கிறாய்;
கழட்டி வந்த பெண்களிடம்
கைவரிசையைக் காட்டுகிறாய்!

மானம் காக்க
மறைத்திருப்பது
சிறையென்று நீ நினைத்தால்;
ஒத்துக்கொள்கிறேன்
ஒளிந்திருக்கிறேன்
உனக்காகத்தான்;
தப்பிப்பதற்கு!

குறையேதுமில்லை
திரையிட்டு வந்தேன்;
உன் இச்சைக்கொண்ட
பார்வைக்கு எச்சில் துப்பி
எதிர்ப்பேன்!

அரைநிர்வாணம்
அழகாய் தோன்றும் உனக்கு;
உன் அக்காள் தங்கை
திறந்து வந்தால் 
முழுக்கோபம் எதற்கு!

மாற்றான் தோட்டத்து
மல்லிகை மட்டும்
மணக்கவேண்டும் உனக்கு;
மானங்கெட்ட மானிடனே
மனைவியை  
பூட்டிவைக்கிறாய் எதற்கு!

போர்த்தியிருக்கும் எங்களை
கழட்டச் சொல்லி கேட்கிறாய்;
கழட்டி வந்த பெண்களிடம்
கைவரிசையைக் காட்டுகிறாய்!

மானம் காக்க
மறைத்திருப்பது
சிறையென்று நீ நினைத்தால்;
ஒத்துக்கொள்கிறேன்
ஒளிந்திருக்கிறேன்
உனக்காகத்தான்;
தப்பிப்பதற்கு!

பத்தினிக் கூட்டம்..



எரியும் நெஞ்சிக்குள்
அணையா நெருப்பு;
கனல் கொண்ட
காகிதமாய் நித்தமும்
முத்தமிடும் சப்தமில்லா
ஒரு இன சுத்தகரிப்பு!

பனிக்கொண்ட மலையிலே
வலிக்கொண்ட குடிமகன்;
காயாதோ எங்கள் ரணம்
போகாதோ எங்கள் துயரம்!

முகத்தைக் காட்டவே வெட்கப்படும்
பத்தினிக் கூட்டம் இன்று
படியிறங்கி பழிதீர்க்க 
கற்களுடன் நாங்கள்!

மரணம் கொண்டாலும்
மனம் உகந்து ஏற்றிடுவோம்;
மானம் போகும் என்றிருந்தால்
ஜகத்தினை எதிர்த்துடுவோம்!

சில்லென்ற மலைகள்
சிலிர்கட்டும்;
பனி நிறைந்தப் பகுதி
சூடேறட்டும்;

குண்டு மழையிட்டாலும்
சோரம் போகமாட்டோம்;
தக்பீர் முழங்கும் வரை
சோர்ந்துப் போகமாட்டோம்!

என்னோடு முடியட்டும்
இந்த நாசம்;
வருங்காலமாவது  நுகரட்டும்
சுதந்திர சுவாசம்!


எரியும் நெஞ்சிக்குள்
அணையா நெருப்பு;
கனல் கொண்ட
காகிதமாய் நித்தமும்
முத்தமிடும் சப்தமில்லா
ஒரு இன சுத்தகரிப்பு!

பனிக்கொண்ட மலையிலே
வலிக்கொண்ட குடிமகன்;
காயாதோ எங்கள் ரணம்
போகாதோ எங்கள் துயரம்!

முகத்தைக் காட்டவே வெட்கப்படும்
பத்தினிக் கூட்டம் இன்று
படியிறங்கி பழிதீர்க்க 
கற்களுடன் நாங்கள்!

மரணம் கொண்டாலும்
மனம் உகந்து ஏற்றிடுவோம்;
மானம் போகும் என்றிருந்தால்
ஜகத்தினை எதிர்த்துடுவோம்!

சில்லென்ற மலைகள்
சிலிர்கட்டும்;
பனி நிறைந்தப் பகுதி
சூடேறட்டும்;

குண்டு மழையிட்டாலும்
சோரம் போகமாட்டோம்;
தக்பீர் முழங்கும் வரை
சோர்ந்துப் போகமாட்டோம்!

என்னோடு முடியட்டும்
இந்த நாசம்;
வருங்காலமாவது  நுகரட்டும்
சுதந்திர சுவாசம்!

கறுப்பு வரலாறு...



மணம் கொண்ட
மலராக மழலைகள் இங்கே;
மனம் கறுத்து
மழலைகளைக் கொன்ற
மா பாதகன் எங்கே!

வெறிப்பிடித்த உனக்கு
வெள்ளை மாளிகையில்
சுகமுண்டு;
கருவருத்த உனக்கு
கறுப்பு வரலாற்றில்
இடமுண்டு!

ஒற்றை உயிர்
இருக்கும் வரை
இறுதிவரைப் போராடுவோம்;
கரம் இரண்டும்
சோர்ந்தாலும்
கனல் மட்டும் எரியவிடுவோம்!

தீராத எங்கள் தாகம்
மாறாத எங்கள் கோபம்;
கண் எட்டும் வரை உனை விடுவதிலில்லை;
கல் உனைக் காட்டிக்கொடுக்கும்
காலமும் வெகுதொலைவில் இல்லை!

ஒளிய மரமும் உனை மறுக்குமடா
ஒழித்துக்கட்ட வருமோமடா!


மணம் கொண்ட
மலராக மழலைகள் இங்கே;
மனம் கறுத்து
மழலைகளைக் கொன்ற
மா பாதகன் எங்கே!

வெறிப்பிடித்த உனக்கு
வெள்ளை மாளிகையில்
சுகமுண்டு;
கருவருத்த உனக்கு
கறுப்பு வரலாற்றில்
இடமுண்டு!

ஒற்றை உயிர்
இருக்கும் வரை
இறுதிவரைப் போராடுவோம்;
கரம் இரண்டும்
சோர்ந்தாலும்
கனல் மட்டும் எரியவிடுவோம்!

தீராத எங்கள் தாகம்
மாறாத எங்கள் கோபம்;
கண் எட்டும் வரை உனை விடுவதிலில்லை;
கல் உனைக் காட்டிக்கொடுக்கும்
காலமும் வெகுதொலைவில் இல்லை!

ஒளிய மரமும் உனை மறுக்குமடா
ஒழித்துக்கட்ட வருமோமடா!

வெளிநாட்டில் நான்..




சோகங்களைச் சொந்தமாக்கி
இதயத்தைப் பாரமாக்கி
இருட்டினில் நாம்
வெளிநாட்டில் நான்!

அன்புக்குச் சேதாரமாய்
உன் புகைப்படம் மட்டும்
தற்போது ஆதாரமாய்!

எல்லாமே இழந்து
பணத்துக்காக மட்டுமே
இங்கேப் பயணம்;
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்
உன் சந்திப்பின் தருணம்!

புத்தாடை உனக்குண்டு
பிள்ளைக்கு நகையுண்டு
செலவுக்குப் பணமுண்டு;
உழைக்க நானுண்டு
பிழைக்கப் பாலையுண்டு!

சிந்தியக் கண்ணீரையும்
சிரிப்பால் மறைப்பேன்;
கவலையேதுமில்லை என
உரைப்பேன்!

மச்சினனுக்கும் விசா வேண்டுமென
விண்ணப்பம் ஒன்றுப் போட்டாய்;
சிரித்துக்கொண்டே அழைத்துக்கொண்டேன்
வளைகுடா வலையில்
இன்னொரு விருந்தாளியா
என்னைப்போல ஏமாளியா!



சோகங்களைச் சொந்தமாக்கி
இதயத்தைப் பாரமாக்கி
இருட்டினில் நாம்
வெளிநாட்டில் நான்!

அன்புக்குச் சேதாரமாய்
உன் புகைப்படம் மட்டும்
தற்போது ஆதாரமாய்!

எல்லாமே இழந்து
பணத்துக்காக மட்டுமே
இங்கேப் பயணம்;
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்
உன் சந்திப்பின் தருணம்!

புத்தாடை உனக்குண்டு
பிள்ளைக்கு நகையுண்டு
செலவுக்குப் பணமுண்டு;
உழைக்க நானுண்டு
பிழைக்கப் பாலையுண்டு!

சிந்தியக் கண்ணீரையும்
சிரிப்பால் மறைப்பேன்;
கவலையேதுமில்லை என
உரைப்பேன்!

மச்சினனுக்கும் விசா வேண்டுமென
விண்ணப்பம் ஒன்றுப் போட்டாய்;
சிரித்துக்கொண்டே அழைத்துக்கொண்டேன்
வளைகுடா வலையில்
இன்னொரு விருந்தாளியா
என்னைப்போல ஏமாளியா!

இன்னொரு அன்னை..






எதைக் கேட்டாலும்
எனை எதிர்க்காத உன்
பொறுமை அழகு;
உன்னோடு எனைச்
சேர்த்துப் பார்க்கும் போது
என் பொறுமை கடுகு!

என்னோடு நீ பாதி
என்றென்னும் தத்துவத்தை
மறந்தேன்;
பனிக் கொண்ட உன் கண்ணீரைக்
என் கரம் கொண்டு துடைப்பேன்!

விலைமதிப்பில்லா உன் தியாகம்
எதைக் கொண்டு உரைப்பேன்;
ஒரு நாள் கதைக்காவிட்டாலும்
உன் பாசம் கண்டுத் திகைப்பேன்!

ஒருப் போதும் கொய்ய மாட்டேன்
வார்த்தையால் உன்னை;
அன்புக்கு எனக்கிடைத்த
இன்னொரு அன்னை!





எதைக் கேட்டாலும்
எனை எதிர்க்காத உன்
பொறுமை அழகு;
உன்னோடு எனைச்
சேர்த்துப் பார்க்கும் போது
என் பொறுமை கடுகு!

என்னோடு நீ பாதி
என்றென்னும் தத்துவத்தை
மறந்தேன்;
பனிக் கொண்ட உன் கண்ணீரைக்
என் கரம் கொண்டு துடைப்பேன்!

விலைமதிப்பில்லா உன் தியாகம்
எதைக் கொண்டு உரைப்பேன்;
ஒரு நாள் கதைக்காவிட்டாலும்
உன் பாசம் கண்டுத் திகைப்பேன்!

ஒருப் போதும் கொய்ய மாட்டேன்
வார்த்தையால் உன்னை;
அன்புக்கு எனக்கிடைத்த
இன்னொரு அன்னை!

முட்ட விட்டு ...






இருதரப்பிற்கும் உள்ளது
இணையத்தளம் கொண்டது;
மாறி மாறி பூசிக்கொள்வோம்
மாற்றி மாற்றி அடித்துக் கொள்வோம்!

கொட்டித் தீர்ப்போம்
முட்டி மோதியக் கதையை;
கட்டுக் கதை ஏதும் இல்லையென
கடிவாளமும் போடுவோம்!

தட்டச்சி தெறிக்கும்
கண்கள் கோபத்தில் சிவக்கும்;
பதில் தரச்சொல்லி தலையே வெடிக்கும்!

எதற்கெடுத்தாலும் குறை சொல்ல
ஒரு கூட்டம் உண்டு;
மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும்
உளவுத்துறை இதைக் கண்டு!

முட்ட விட்டு வேடிக்கைப்
பார்ப்பது யாரென்று தெரியாது;
முத்தமிட்டு அனைத்துக்கொள்ளும்
நாளொன்றும் கிடையாதா!

மனம் மகிழும்
காவிகளுக்கு கைக்காரியம் குறைவு;
எப்போது எட்டுமோ
என் சமுதாயம் தெளிவு!

ஒன்றாக வேண்டுமென
ஒருக் கூட்டம் நினைக்கும்;
முடியாதோ இவ்வேதனை
மனம் பதைப் பதைக்கும்!





இருதரப்பிற்கும் உள்ளது
இணையத்தளம் கொண்டது;
மாறி மாறி பூசிக்கொள்வோம்
மாற்றி மாற்றி அடித்துக் கொள்வோம்!

கொட்டித் தீர்ப்போம்
முட்டி மோதியக் கதையை;
கட்டுக் கதை ஏதும் இல்லையென
கடிவாளமும் போடுவோம்!

தட்டச்சி தெறிக்கும்
கண்கள் கோபத்தில் சிவக்கும்;
பதில் தரச்சொல்லி தலையே வெடிக்கும்!

எதற்கெடுத்தாலும் குறை சொல்ல
ஒரு கூட்டம் உண்டு;
மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும்
உளவுத்துறை இதைக் கண்டு!

முட்ட விட்டு வேடிக்கைப்
பார்ப்பது யாரென்று தெரியாது;
முத்தமிட்டு அனைத்துக்கொள்ளும்
நாளொன்றும் கிடையாதா!

மனம் மகிழும்
காவிகளுக்கு கைக்காரியம் குறைவு;
எப்போது எட்டுமோ
என் சமுதாயம் தெளிவு!

ஒன்றாக வேண்டுமென
ஒருக் கூட்டம் நினைக்கும்;
முடியாதோ இவ்வேதனை
மனம் பதைப் பதைக்கும்!

தூரத்தேசத்து நண்பன்



வாக்குரிமைச் சொல்லும்
இந்தியன் என்று
வாழும் இடம் சொல்லும்
காஷ்மீர் என்று;
பத்திரிக்கைச் சொல்லும்
பயங்கரவாதி என்று;
காவல் துறைச் சொல்லும்
தீவிரவாதி என்று;
அரசியல் சொல்லும்
கலகக்காரன் என்று!

உலகெங்கும் ஆதரவுண்டு
தனி நாடு இஸ்ரேலுக்குண்டு;
தனி ஈழம் முழக்கமுண்டு
கைகொடுக்க கழகமுண்டு!

அறுத்துவிட்ட அனாதைகளாக;
வேலியே பயிரை மேயும்;
எங்கள் உயிரை வாங்கும்!


இங்கு மட்டும்தான்
பிறந்த பாலகனும் பயங்கரவாதியாக;
கம்பூன்றும் கிழவனும்
தீவிரவாதியாக!

நிம்மதியாய் சுவாசம்விட
நிம்மதி தொலைத்து நிற்கும்
தூரத்தேசத்து நண்பன்!


வாக்குரிமைச் சொல்லும்
இந்தியன் என்று
வாழும் இடம் சொல்லும்
காஷ்மீர் என்று;
பத்திரிக்கைச் சொல்லும்
பயங்கரவாதி என்று;
காவல் துறைச் சொல்லும்
தீவிரவாதி என்று;
அரசியல் சொல்லும்
கலகக்காரன் என்று!

உலகெங்கும் ஆதரவுண்டு
தனி நாடு இஸ்ரேலுக்குண்டு;
தனி ஈழம் முழக்கமுண்டு
கைகொடுக்க கழகமுண்டு!

அறுத்துவிட்ட அனாதைகளாக;
வேலியே பயிரை மேயும்;
எங்கள் உயிரை வாங்கும்!


இங்கு மட்டும்தான்
பிறந்த பாலகனும் பயங்கரவாதியாக;
கம்பூன்றும் கிழவனும்
தீவிரவாதியாக!

நிம்மதியாய் சுவாசம்விட
நிம்மதி தொலைத்து நிற்கும்
தூரத்தேசத்து நண்பன்!

பரிந்துப்பேச உனையன்றி ..



வழிமேல் விழிவைத்துக்
காத்திருந்தாலும்
வலி மட்டுமே மிஞ்சும்;
உன் நினைவுகள் எப்போதும் கெஞ்சும்!

ஒருமாத விடுப்பில்
ஒய்யாரமாய் வந்தாய்;
மணம் முடித்தாய்
கனம் கொடுத்தாய்;
கடல் தாண்டினாய்!

புதுமுகமாய் எல்லோரும்
உன் வீட்டில் -என்
புத்தம் புது ஆடைகளெல்லாம்
எனைப் பார்க்க வந்த
உன் உறவினருக்காக!

முதல் மாதத்தில் கேட்டேன்
எப்போது திரும்புவாய் என்று;
சிரித்தாய்;
மறு மாதத்தில் கேட்டேன்
புன்னகைத்தாய்;
மற்றொரு முறைக் கேட்டேன்
கடுகடுத்தாய்!

புரியாத எனக்கு
புதிராகவே இருந்தது;
மனம் கனமாக இருந்தது!

பரிந்துப்பேச உனையன்றி
யாருமில்லை எனக்கு;
புரிந்துக் கொண்டு
புறப்பட்டுவா அன்புக்
கட்டளையிடுகிறேன் உனக்கு!

இப்படி
மணம் முடித்து
மனம் கொடுத்து
தனம் எடுக்க
வனம் இருந்து
வாழ்வதற்கு
வந்துவிடு இங்கே!


வழிமேல் விழிவைத்துக்
காத்திருந்தாலும்
வலி மட்டுமே மிஞ்சும்;
உன் நினைவுகள் எப்போதும் கெஞ்சும்!

ஒருமாத விடுப்பில்
ஒய்யாரமாய் வந்தாய்;
மணம் முடித்தாய்
கனம் கொடுத்தாய்;
கடல் தாண்டினாய்!

புதுமுகமாய் எல்லோரும்
உன் வீட்டில் -என்
புத்தம் புது ஆடைகளெல்லாம்
எனைப் பார்க்க வந்த
உன் உறவினருக்காக!

முதல் மாதத்தில் கேட்டேன்
எப்போது திரும்புவாய் என்று;
சிரித்தாய்;
மறு மாதத்தில் கேட்டேன்
புன்னகைத்தாய்;
மற்றொரு முறைக் கேட்டேன்
கடுகடுத்தாய்!

புரியாத எனக்கு
புதிராகவே இருந்தது;
மனம் கனமாக இருந்தது!

பரிந்துப்பேச உனையன்றி
யாருமில்லை எனக்கு;
புரிந்துக் கொண்டு
புறப்பட்டுவா அன்புக்
கட்டளையிடுகிறேன் உனக்கு!

இப்படி
மணம் முடித்து
மனம் கொடுத்து
தனம் எடுக்க
வனம் இருந்து
வாழ்வதற்கு
வந்துவிடு இங்கே!

விடுகதை இதற்கு...



எல்லோரும் அறையினில் சிரிக்க
நான் மட்டும் தனிமையில் இருக்க;
கலங்கியக் கண்ணீரை
விளங்கிய நண்பர்கள்!

கனவுகள் கண்களில் மிளிர
கடமைகள் கண்டு மிரள;
வழியில்லாமல்
வலியுடன் வளைகுடாவில்!

பலியாய் நம் உறவுகள்
விழிகள் குளத்தில் நீராடும்;
கவலைகளால் தள்ளாடும்!

லட்சியங்கள் சில
லட்சத்திற்க்காக ஏங்கி நிற்கும்;
விடைக்கொடுக்க நினைத்தாலும்
வினாக்களால் ஸ்தம்பித்து நிற்பேன்!

விடுகதை இதற்கு
தொடர்க்கதை இருக்கு;
ஆனாலும் உழைக்கிறேன்
என்னைபோல் என் தலைமுறை
ஏங்காமல் இருக்க;
இங்கு வாராமல் இருக்க!



எல்லோரும் அறையினில் சிரிக்க
நான் மட்டும் தனிமையில் இருக்க;
கலங்கியக் கண்ணீரை
விளங்கிய நண்பர்கள்!

கனவுகள் கண்களில் மிளிர
கடமைகள் கண்டு மிரள;
வழியில்லாமல்
வலியுடன் வளைகுடாவில்!

பலியாய் நம் உறவுகள்
விழிகள் குளத்தில் நீராடும்;
கவலைகளால் தள்ளாடும்!

லட்சியங்கள் சில
லட்சத்திற்க்காக ஏங்கி நிற்கும்;
விடைக்கொடுக்க நினைத்தாலும்
வினாக்களால் ஸ்தம்பித்து நிற்பேன்!

விடுகதை இதற்கு
தொடர்க்கதை இருக்கு;
ஆனாலும் உழைக்கிறேன்
என்னைபோல் என் தலைமுறை
ஏங்காமல் இருக்க;
இங்கு வாராமல் இருக்க!

பெண்மை புகழ் காக்க..



மங்கையின்
மறைந்திருக்கும் அவயங்களை
முறைத்துப் பார்த்துச் செல்லும்
உலகம் திறந்துக்காட்டச் சொல்லும்!

இழுத்துப்போர்த்தி நடந்துச்சென்றால்
அடிப்படைவாதி என்றேச் சொல்லும்;
அடிமைசாசனம் செய்யும்!

சமத்துவம் சொல்லும்
பள்ளியிலே மதத்துவேசம் நடக்கும்;
எதிர்த்து நின்றுக் குரல் கொடுத்தால்
இல்லையென்றே நடிக்கும்!

அவிழ்த்துப் பார்க்க
ஆசைப்படும் அவல
நிலையைப்பாருங்கள்!
என் பிள்ளைப் போர்த்திச் சென்றால்
இவனுக்கென்ன கேளுங்கள்!

அழகைக் காட்டிச் சென்றால்
உச்கொட்டும் உலகம்;
ஒரு நாள்
இச்கொட்டத் துணியும்;
பெண்மை புகழ் காக்க
புர்க்கா உண்டு தாமதிக்காதீர்கள் இனியும்!


மங்கையின்
மறைந்திருக்கும் அவயங்களை
முறைத்துப் பார்த்துச் செல்லும்
உலகம் திறந்துக்காட்டச் சொல்லும்!

இழுத்துப்போர்த்தி நடந்துச்சென்றால்
அடிப்படைவாதி என்றேச் சொல்லும்;
அடிமைசாசனம் செய்யும்!

சமத்துவம் சொல்லும்
பள்ளியிலே மதத்துவேசம் நடக்கும்;
எதிர்த்து நின்றுக் குரல் கொடுத்தால்
இல்லையென்றே நடிக்கும்!

அவிழ்த்துப் பார்க்க
ஆசைப்படும் அவல
நிலையைப்பாருங்கள்!
என் பிள்ளைப் போர்த்திச் சென்றால்
இவனுக்கென்ன கேளுங்கள்!

அழகைக் காட்டிச் சென்றால்
உச்கொட்டும் உலகம்;
ஒரு நாள்
இச்கொட்டத் துணியும்;
பெண்மை புகழ் காக்க
புர்க்கா உண்டு தாமதிக்காதீர்கள் இனியும்!

சுதந்திர இந்தியாவில் நாங்கள்...



மறந்துப்போன
மனிதநேயம்;
மரத்துவிட்ட
மனிதனின் மனம்!

குட்டி நாய் அடிப்பட்டாலும்
குமுறும் சமூகம் – எங்களை
வெட்டிப்போட்டாலும்
வேடிக்கைப் பார்க்கும்!
நல்ல உள்ளங்களுக்கு
நடுவே சில மதம் பிடித்த யானை;
மிதித்துவிட்டு
மிரட்டிவிட்டுச் செல்லும் - எங்களை
விரட்டி விரட்டிக் கொல்லும்!

விடுதலைக்கு
வித்திட்ட சத்தான சமூகம்;
களம் காண கல்விக்கு
பிரிவுக்கொடுத்தோம் பின்னாளில்
பறிக்கொடுத்தோம்!

மறந்துவிட்ட எங்கள் தியாகம்
மறைத்துவிட்டது எங்கள் சோகம்!
வெடித்தாலும் எங்கள் மீதேப் பழி
இடித்தாலும் எங்கள் மீதேப் பழி;

காஷ்மீரில் இருந்து
கன்னியாக்குமரிவரை
எங்களுக்குப் பிடித்த
காவலர்கள் குறைவு – பிடிக்காமல்;
எங்களைப் பிடித்த காவலர்கள் நிறைவு!

ஓட்டுக்கேட்க மட்டும்
ஓடி வரும் அரசியல் கூட்டம்;
வினாவோடு நாங்கள் போகும்போது
விடைக்கொடுத்துவிட்டு சென்றிடும்
வினோத அரசியல்வாதிகள்!

பத்திரிக்கைகளின்
பக்கம் நிரம்ப
முதலில் எங்கள் மீது பழிப்போடும்;
பின்புதான் வழித்தேடும்
குற்றம் செய்தது யார் என்று!


மறந்துப்போன
மனிதநேயம்;
மரத்துவிட்ட
மனிதனின் மனம்!

குட்டி நாய் அடிப்பட்டாலும்
குமுறும் சமூகம் – எங்களை
வெட்டிப்போட்டாலும்
வேடிக்கைப் பார்க்கும்!
நல்ல உள்ளங்களுக்கு
நடுவே சில மதம் பிடித்த யானை;
மிதித்துவிட்டு
மிரட்டிவிட்டுச் செல்லும் - எங்களை
விரட்டி விரட்டிக் கொல்லும்!

விடுதலைக்கு
வித்திட்ட சத்தான சமூகம்;
களம் காண கல்விக்கு
பிரிவுக்கொடுத்தோம் பின்னாளில்
பறிக்கொடுத்தோம்!

மறந்துவிட்ட எங்கள் தியாகம்
மறைத்துவிட்டது எங்கள் சோகம்!
வெடித்தாலும் எங்கள் மீதேப் பழி
இடித்தாலும் எங்கள் மீதேப் பழி;

காஷ்மீரில் இருந்து
கன்னியாக்குமரிவரை
எங்களுக்குப் பிடித்த
காவலர்கள் குறைவு – பிடிக்காமல்;
எங்களைப் பிடித்த காவலர்கள் நிறைவு!

ஓட்டுக்கேட்க மட்டும்
ஓடி வரும் அரசியல் கூட்டம்;
வினாவோடு நாங்கள் போகும்போது
விடைக்கொடுத்துவிட்டு சென்றிடும்
வினோத அரசியல்வாதிகள்!

பத்திரிக்கைகளின்
பக்கம் நிரம்ப
முதலில் எங்கள் மீது பழிப்போடும்;
பின்புதான் வழித்தேடும்
குற்றம் செய்தது யார் என்று!

பாவப்பட்ட காஷ்மீரிகள்..




குழந்தைப் பருவத்தில்
குழப்பமாய் இருக்கும்;
குண்டுச் சத்தம் மட்டும்
ஓயாமல் கேட்கும்!

நித்திரையைக் கிழித்துக் கொண்டு
நித்தம் ஒரு கூட்டம் வரும்
நடுநிசியில்;
கேட்டால் ஆணவமாய்
இராணுவம் என்பார்கள்!

புரியாத வார்த்தையால்
தெரிந்த பாஷையிலே
திட்டுவார்கள்;
புரியாது எனக்கு அன்று;
புரிந்தது இன்று;
அன்னையும் அக்காளும்
அழுதது! 

எப்போதும்
அலறும் சத்தம் - எல்லோரும்
அழும் சத்தம்!

இங்கு உள்ள பள்ளிகள் மட்டும்
சற்று வித்தியாசமாய்;
வேலை நேரத்தை மட்டும் அறிவிப்பார்கள்;
விடுமுறையை அல்ல!
பெரும்பாலும் விடுமுறையே!

கல்லூரிக்குச் செல்லும்
காலம் வந்தது - அடிக்கடி
காவல் துறை எங்கள்
காலரைப் பிடிக்கும்
காலாலே உதைககும்!

எதிர்த்த நண்பர்களை 
மறுநாள் பார்ப்போம்
பத்திரிகையில்;
பயங்கரவாதி என்று!

சுதந்திர நாட்டில்
சுதந்திரத்திற்க்காக
நாங்கள்;

பாதுகாப்பு அரணாய்
பாரதத்திற்கு எங்கள்
தேசம் மலைகளாக!

பாதுகாப்பே இல்லா
பரதேசிகளாக நாங்கள்;
பல நேரம் பயங்கரவாதியாக
இராணுவத்திற்கு!

அதிகாரிகள் சுட்டுப் பார்க்க
சோதனைக்கான
சுண்டெலியாக நாங்கள்;

மாற்றட்டும் இனிக்
காவல் துறை அல்ல
காவுத் துறை என்று!

மறைந்துப்போன
மாயமென்ன
மனிதஉரிமைக்கு
வந்தக்கேடு என்ன!


குழந்தைப் பருவத்தில்
குழப்பமாய் இருக்கும்;
குண்டுச் சத்தம் மட்டும்
ஓயாமல் கேட்கும்!

நித்திரையைக் கிழித்துக் கொண்டு
நித்தம் ஒரு கூட்டம் வரும்
நடுநிசியில்;
கேட்டால் ஆணவமாய்
இராணுவம் என்பார்கள்!

புரியாத வார்த்தையால்
தெரிந்த பாஷையிலே
திட்டுவார்கள்;
புரியாது எனக்கு அன்று;
புரிந்தது இன்று;
அன்னையும் அக்காளும்
அழுதது! 

எப்போதும்
அலறும் சத்தம் - எல்லோரும்
அழும் சத்தம்!

இங்கு உள்ள பள்ளிகள் மட்டும்
சற்று வித்தியாசமாய்;
வேலை நேரத்தை மட்டும் அறிவிப்பார்கள்;
விடுமுறையை அல்ல!
பெரும்பாலும் விடுமுறையே!

கல்லூரிக்குச் செல்லும்
காலம் வந்தது - அடிக்கடி
காவல் துறை எங்கள்
காலரைப் பிடிக்கும்
காலாலே உதைககும்!

எதிர்த்த நண்பர்களை 
மறுநாள் பார்ப்போம்
பத்திரிகையில்;
பயங்கரவாதி என்று!

சுதந்திர நாட்டில்
சுதந்திரத்திற்க்காக
நாங்கள்;

பாதுகாப்பு அரணாய்
பாரதத்திற்கு எங்கள்
தேசம் மலைகளாக!

பாதுகாப்பே இல்லா
பரதேசிகளாக நாங்கள்;
பல நேரம் பயங்கரவாதியாக
இராணுவத்திற்கு!

அதிகாரிகள் சுட்டுப் பார்க்க
சோதனைக்கான
சுண்டெலியாக நாங்கள்;

மாற்றட்டும் இனிக்
காவல் துறை அல்ல
காவுத் துறை என்று!

மறைந்துப்போன
மாயமென்ன
மனிதஉரிமைக்கு
வந்தக்கேடு என்ன!

எருது சிங்கம் பாடத்திலே...



ஏகத்துவத்தை எத்திவைக்க
ஏறாத படிகள் இல்லை
வாங்காத அடிகளில்லை!

ஒடஒட விரட்டும் போது
ஒன்றாய்தானே ஒடினோம்;
மறைந்துக்கொள்ள இடம் கண்டு
முதல் உரிமை
உனக்குண்டு என்றோம்!

துவண்டப் போது
தோள்கொடுத்தோம்;
கலங்கும் போது
கரம் கொடுத்தோம்;

ஒன்றாய் இருந்த நாமோ
உடைத்துவிட்டுச் சென்றோம்;
இயக்கத்தை கலைத்துவிட்டுச் சென்றோம்!

அதுவரை
முகர்ந்துக்கொண்ட நாமோ
முகத்தைத் திருப்பிக்கொண்டோம்!
ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொண்டோம்!

காரசாரமாய் மேடையில்
ஏறினோம் – சகோதரத்துவத்தை
பாடையில் ஏற்றினோம்;

வீணான பேச்சாலே
ஈமானை மறந்தோம்;
காரமாகப் பேசுவது
வீரமாக நினைத்திருந்தோம்;
வெற்றிக்களிப்பில் தனித்திருந்தோம்!

ஏங்காத நாளில்லை
ஏன் இந்த அவல நிலை;
எருது சிங்கம் பாடத்திலே
எருது வீழ்ச்சியை படித்தோமே;
பள்ளிக்கதையை மறந்தோமே!

பொதுவான எதிரிக்கு
ஒன்றுப்பட்டு நிற்போம்;
நின்றுக்காட்டி ஜெயிப்போம்!

இரத்தவெறிக் கொண்ட
காலமிது;
இரத்த உறவே சேர்ந்துவிடு!

நமக்கு
ஆறாத ரணமுண்டு
தீராதப் பகையுண்டு;
களம் காணுவோம்
ஒன்றாய்
பிரிந்திருக்க வேண்டாம்
இரண்டாய்!


ஏகத்துவத்தை எத்திவைக்க
ஏறாத படிகள் இல்லை
வாங்காத அடிகளில்லை!

ஒடஒட விரட்டும் போது
ஒன்றாய்தானே ஒடினோம்;
மறைந்துக்கொள்ள இடம் கண்டு
முதல் உரிமை
உனக்குண்டு என்றோம்!

துவண்டப் போது
தோள்கொடுத்தோம்;
கலங்கும் போது
கரம் கொடுத்தோம்;

ஒன்றாய் இருந்த நாமோ
உடைத்துவிட்டுச் சென்றோம்;
இயக்கத்தை கலைத்துவிட்டுச் சென்றோம்!

அதுவரை
முகர்ந்துக்கொண்ட நாமோ
முகத்தைத் திருப்பிக்கொண்டோம்!
ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொண்டோம்!

காரசாரமாய் மேடையில்
ஏறினோம் – சகோதரத்துவத்தை
பாடையில் ஏற்றினோம்;

வீணான பேச்சாலே
ஈமானை மறந்தோம்;
காரமாகப் பேசுவது
வீரமாக நினைத்திருந்தோம்;
வெற்றிக்களிப்பில் தனித்திருந்தோம்!

ஏங்காத நாளில்லை
ஏன் இந்த அவல நிலை;
எருது சிங்கம் பாடத்திலே
எருது வீழ்ச்சியை படித்தோமே;
பள்ளிக்கதையை மறந்தோமே!

பொதுவான எதிரிக்கு
ஒன்றுப்பட்டு நிற்போம்;
நின்றுக்காட்டி ஜெயிப்போம்!

இரத்தவெறிக் கொண்ட
காலமிது;
இரத்த உறவே சேர்ந்துவிடு!

நமக்கு
ஆறாத ரணமுண்டு
தீராதப் பகையுண்டு;
களம் காணுவோம்
ஒன்றாய்
பிரிந்திருக்க வேண்டாம்
இரண்டாய்!

உறவும் பிரிவும்



ஒட்டி வந்த உறவுகளை
வெட்டி வந்திருக்கிறோம்
கடமைகளைக் கட்டி
வந்திருக்கிறோம்!

கைக்கோர்த்துக்
கதைப்பேச வேண்டிய
மனைவியை விட்டு
வந்திருக்கிறோம்;
சோகங்களை நட்டு
வந்திருக்கிறோம்!

கந்தையானாலும்
கசக்கி கட்டு பழமொழி உண்டு ;
கசங்கிய சட்டையை நாங்கள்
அணிந்தோம் குடும்பம்
கசங்காமல் இருக்க!

கடல் தேடி வந்திருக்கிறோம்
திரவியத்திற்க்காக;
கனவுகளைத் தொலைத்தோம்
திர்ஹம்சுக்காக!

உள்ளூரில் விலைப்போவாததால்
வளைக்குடாவில் நாங்கள்;
அடிமாட்டு விலைக்கு சிலர்!

ஆளுக்கு ஆறடி
படுப்பதற்கு மட்டும் இங்கே;
ஒற்றை குளியலறைக்கு
எல்லோரும்;
அடுத்த முறை உரிமையாளன்
அலாரமாய் அடிப்பான்
 கதவோடு!

உள்நாட்டு மோகம்
வெளிநாடோ சோகம்
பணம் சேர்த்தாலும் தீராத தாகம்!

இருக்கிறதை விட்டு விட்டு
பறப்பதற்கு ஆசை;
பறந்தப் பின்னும்
பருந்தாய் பணத்திற்கு!


ஒட்டி வந்த உறவுகளை
வெட்டி வந்திருக்கிறோம்
கடமைகளைக் கட்டி
வந்திருக்கிறோம்!

கைக்கோர்த்துக்
கதைப்பேச வேண்டிய
மனைவியை விட்டு
வந்திருக்கிறோம்;
சோகங்களை நட்டு
வந்திருக்கிறோம்!

கந்தையானாலும்
கசக்கி கட்டு பழமொழி உண்டு ;
கசங்கிய சட்டையை நாங்கள்
அணிந்தோம் குடும்பம்
கசங்காமல் இருக்க!

கடல் தேடி வந்திருக்கிறோம்
திரவியத்திற்க்காக;
கனவுகளைத் தொலைத்தோம்
திர்ஹம்சுக்காக!

உள்ளூரில் விலைப்போவாததால்
வளைக்குடாவில் நாங்கள்;
அடிமாட்டு விலைக்கு சிலர்!

ஆளுக்கு ஆறடி
படுப்பதற்கு மட்டும் இங்கே;
ஒற்றை குளியலறைக்கு
எல்லோரும்;
அடுத்த முறை உரிமையாளன்
அலாரமாய் அடிப்பான்
 கதவோடு!

உள்நாட்டு மோகம்
வெளிநாடோ சோகம்
பணம் சேர்த்தாலும் தீராத தாகம்!

இருக்கிறதை விட்டு விட்டு
பறப்பதற்கு ஆசை;
பறந்தப் பின்னும்
பருந்தாய் பணத்திற்கு!

துடைத்துவிட்டுச் செல்லும் ..



விக்கித்து நிற்போம்
திரும்பும் இடமெல்லாம்
திக்கற்று இருப்போம்!

விட்டு வந்த சொந்தங்களை
சுமந்து வந்துள்ளேன்
நினைவுகளாக!

குழுக் குளு அறையானாலும்
குறும்புச் செய்யும்
மூட்டையானாலும்
இறுக்கமாய் இருப்பேன்;
எப்போது
நான் உறவுகளுடன்
நெருக்கமாய் இருப்பேன்!

ஓய்வான நேரத்திலும்
சாய்வாக இருந்து
உறவுகளை நினைப்பேன்;
அவ்வப்போது குரலைக் கனைப்பேன்;
தொண்டையில் சிக்கிய எச்சிலுக்காக!

ஆனாலும்
வருமானம் என் கண்ணீரை
துடைத்துவிட்டுச் செல்லும்
விரலாக!
அதனாலே இங்கு இருக்கிறேன்
உரலாக!


விக்கித்து நிற்போம்
திரும்பும் இடமெல்லாம்
திக்கற்று இருப்போம்!

விட்டு வந்த சொந்தங்களை
சுமந்து வந்துள்ளேன்
நினைவுகளாக!

குழுக் குளு அறையானாலும்
குறும்புச் செய்யும்
மூட்டையானாலும்
இறுக்கமாய் இருப்பேன்;
எப்போது
நான் உறவுகளுடன்
நெருக்கமாய் இருப்பேன்!

ஓய்வான நேரத்திலும்
சாய்வாக இருந்து
உறவுகளை நினைப்பேன்;
அவ்வப்போது குரலைக் கனைப்பேன்;
தொண்டையில் சிக்கிய எச்சிலுக்காக!

ஆனாலும்
வருமானம் என் கண்ணீரை
துடைத்துவிட்டுச் செல்லும்
விரலாக!
அதனாலே இங்கு இருக்கிறேன்
உரலாக!

நான் மட்டும் தனியாக..


பட்டம் வாங்கியதும்
சுற்றித் திறிந்தேன்
இறக்கைக்கட்டி!

அடங்காப் பிள்ளையாக
இருந்தாலும் அம்மாவுக்கு
செல்லமாக!

கடவுச் சீட்டு கையில் வந்தது
கனவுகள் கலைந்தது
கடமைகள் பெருத்தது!

திட்டித் தீர்க்கும்
தந்தையோ
தட்டிக்கொடுத்தார்!

கொஞ்சும் அம்மாவோ
குழந்தையானாள்
அழுவதில் மட்டும்!

வம்புச் செய்யும்
தம்பியோ
தேம்பி அழுதான்!

அடிக்கடி அடிக்கும்
அக்காவோ
முத்தமிட்டால்;
நெஞ்சத்தை தொட்டுவிட்டாள்!

என்றுமே அழுததில்லை
அன்று நான் கண்டது
பாசம் எனை வென்றது;

தடுக்க முடியாமல்
தாரைத் தாரையாக
கண்ணீர் என்னைக் கடந்தது!

ஒட்டி உறவாடிய
நண்பர்களோ
கட்டித்தழுவி சென்றார்கள்!

இப்போது
நான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!

வருமானத்திற்காக
வளைகுடாவில்
செரிமாணமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!

பட்டம் வாங்கியதும்
சுற்றித் திறிந்தேன்
இறக்கைக்கட்டி!

அடங்காப் பிள்ளையாக
இருந்தாலும் அம்மாவுக்கு
செல்லமாக!

கடவுச் சீட்டு கையில் வந்தது
கனவுகள் கலைந்தது
கடமைகள் பெருத்தது!

திட்டித் தீர்க்கும்
தந்தையோ
தட்டிக்கொடுத்தார்!

கொஞ்சும் அம்மாவோ
குழந்தையானாள்
அழுவதில் மட்டும்!

வம்புச் செய்யும்
தம்பியோ
தேம்பி அழுதான்!

அடிக்கடி அடிக்கும்
அக்காவோ
முத்தமிட்டால்;
நெஞ்சத்தை தொட்டுவிட்டாள்!

என்றுமே அழுததில்லை
அன்று நான் கண்டது
பாசம் எனை வென்றது;

தடுக்க முடியாமல்
தாரைத் தாரையாக
கண்ணீர் என்னைக் கடந்தது!

ஒட்டி உறவாடிய
நண்பர்களோ
கட்டித்தழுவி சென்றார்கள்!

இப்போது
நான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!

வருமானத்திற்காக
வளைகுடாவில்
செரிமாணமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!

கிழட்டு குழியானாலும்..



இருப்பேன் என்றும்
இளமையாக மனதளவில்;
 உன்னோடு இருக்கும் போது!

வாயில் பொக்கையும்
தலையில் வழுக்கையும்
வந்தாலும் வரவேண்டாம்
நமக்குள் பிரிவு!

தட்டுத்தடுமாறி நடக்கையிலே
நடைக்குச்சியாய் நீ இருக்க
தடையேதுமில்லை என
விடைக் கொடுக்க வேண்டும்;
குச்சிக்கு விடைக்கொடுக்கவேண்டும்!


கிழட்டு குழியானாலும்
நமட்டுச் சிரிப்புடன்
கன்னத்தில் குழியென்று
சொல்லி சிரிக்கவேண்டும்!

வாலிப வயதில்
வாழ்ந்துவிட்டோம்
தனித்தனியாக;
இருக்கும் காலமாவது
இணைந்திருபோம்
ஒருவருக்கொருவராக!


இருப்பேன் என்றும்
இளமையாக மனதளவில்;
 உன்னோடு இருக்கும் போது!

வாயில் பொக்கையும்
தலையில் வழுக்கையும்
வந்தாலும் வரவேண்டாம்
நமக்குள் பிரிவு!

தட்டுத்தடுமாறி நடக்கையிலே
நடைக்குச்சியாய் நீ இருக்க
தடையேதுமில்லை என
விடைக் கொடுக்க வேண்டும்;
குச்சிக்கு விடைக்கொடுக்கவேண்டும்!


கிழட்டு குழியானாலும்
நமட்டுச் சிரிப்புடன்
கன்னத்தில் குழியென்று
சொல்லி சிரிக்கவேண்டும்!

வாலிப வயதில்
வாழ்ந்துவிட்டோம்
தனித்தனியாக;
இருக்கும் காலமாவது
இணைந்திருபோம்
ஒருவருக்கொருவராக!

இப்படிக்கு உன் கணவன்..



அணுதினமும்
மனு ஒன்று வைப்பாய்;
எவ்வளவு பிடிக்கும் என்னை!

பழகிப்போன வினா;
ஆனாலும்
சிரித்தப்படியே உரைப்பேன்
நிறைய என்று!

என்றுமே நீ கேட்ட பதில்தான்;
இருந்தாலும் உன்
சில்லறை சிரிப்புகள்
சிலுசிலுக்கும் என்னை
குதுகலிக்கும்!

கதைத்து முடித்ததும்
நெஞ்சம் கனக்கும்
படுத்ததும் வெடிக்கும்!

காதோடு ஏதோ
கண்ணீர்
கிசுகிசுக்கும் முடிந்ததும்
கன்னம் பிசுபிசுக்கும்!

துக்கத்திலே
தூங்கிப்போனது தெரியாது;
பதில் ஏதும் கிடையாது!

துண்டித்து துண்டித்து
கொடுக்கும் உன் அழைப்பை
கண்டிப்பேன்;
ஆனாலும் காத்திருப்பேன்
மீண்டும் தருவாயா என!

பேசும் நாளெல்லாம் இனிக்கும்
பேசாத நிமிடம் மட்டும் வலிக்கும்;
சண்டையிட்டாலும்
சரணடைந்துவிடுவோம்
இணைப்பை துண்டிப்பதற்குள்!

இப்படிக்கு
மடிக்கணினியுடன்
மல்லுக்கட்டும் உன்
கணவன்!


அணுதினமும்
மனு ஒன்று வைப்பாய்;
எவ்வளவு பிடிக்கும் என்னை!

பழகிப்போன வினா;
ஆனாலும்
சிரித்தப்படியே உரைப்பேன்
நிறைய என்று!

என்றுமே நீ கேட்ட பதில்தான்;
இருந்தாலும் உன்
சில்லறை சிரிப்புகள்
சிலுசிலுக்கும் என்னை
குதுகலிக்கும்!

கதைத்து முடித்ததும்
நெஞ்சம் கனக்கும்
படுத்ததும் வெடிக்கும்!

காதோடு ஏதோ
கண்ணீர்
கிசுகிசுக்கும் முடிந்ததும்
கன்னம் பிசுபிசுக்கும்!

துக்கத்திலே
தூங்கிப்போனது தெரியாது;
பதில் ஏதும் கிடையாது!

துண்டித்து துண்டித்து
கொடுக்கும் உன் அழைப்பை
கண்டிப்பேன்;
ஆனாலும் காத்திருப்பேன்
மீண்டும் தருவாயா என!

பேசும் நாளெல்லாம் இனிக்கும்
பேசாத நிமிடம் மட்டும் வலிக்கும்;
சண்டையிட்டாலும்
சரணடைந்துவிடுவோம்
இணைப்பை துண்டிப்பதற்குள்!

இப்படிக்கு
மடிக்கணினியுடன்
மல்லுக்கட்டும் உன்
கணவன்!

தாகத்தைத் தணிக்க..



நெடுந்தூரப் பயணம்
தாகத்தைத் தணிக்க
தாகத்துடன் தினமும்
ஏக்கத்துடன்!

வறண்டுப்போன பூமியால்
மிரண்டுப்போன வாழ்க்கை
இறுண்டுப்போன நாங்கள்!

சேர்க்க வேண்டியக் காலத்தில்
சேர்க்காமல் இருந்ததால்
சேற்றைப்பார்க்க முடியாமல்!

படைகளைக் கொண்டு
எதிரிகள் உண்டு
எதிர்காலத்தில்;
எண்ணையைப் போல
நீருக்கும்!

நீரும் இருக்காது
நீயும் இல்லாது!
முழுதாய் காய்ந்திடும்
முன்னே சேர்த்திடு
நீரைக் காத்திடு!


நெடுந்தூரப் பயணம்
தாகத்தைத் தணிக்க
தாகத்துடன் தினமும்
ஏக்கத்துடன்!

வறண்டுப்போன பூமியால்
மிரண்டுப்போன வாழ்க்கை
இறுண்டுப்போன நாங்கள்!

சேர்க்க வேண்டியக் காலத்தில்
சேர்க்காமல் இருந்ததால்
சேற்றைப்பார்க்க முடியாமல்!

படைகளைக் கொண்டு
எதிரிகள் உண்டு
எதிர்காலத்தில்;
எண்ணையைப் போல
நீருக்கும்!

நீரும் இருக்காது
நீயும் இல்லாது!
முழுதாய் காய்ந்திடும்
முன்னே சேர்த்திடு
நீரைக் காத்திடு!

விடைக்கொடுக்க முடியாமல்...




அடை மழையிலும்
வேலைக்கு விடைக்கொடுக்க
முடியாமல்  நான்!

வறுமைக்கு
வாக்கப்பட்டதால்
வயதானக் காலத்தில்
இப்படி!

உயர்வேதும் இல்லை பதவியில்;
உயரம் கூடினாலே
அன்றி!

வரம்பேதும் இல்லை வயதிற்கு;
மூட்டுக்கு
முடிச்சி விழும்
வரை!

இல்லாத செல்வத்தால்
பொல்லாத வறுமை;
இப்போது
அழுதாலும் கவலையில்லை
மழையோடு சேர்ந்து
மறைந்துவிடுமென்று!

கனவேதும் பெரியதில்லை
ஒருநாள் உழைத்ததைக் கொண்டு
மறுநாளும் உண்ண வேண்டும்;
தினக்கூலி என்றப் பெயர் மாறவேண்டும்!



அடை மழையிலும்
வேலைக்கு விடைக்கொடுக்க
முடியாமல்  நான்!

வறுமைக்கு
வாக்கப்பட்டதால்
வயதானக் காலத்தில்
இப்படி!

உயர்வேதும் இல்லை பதவியில்;
உயரம் கூடினாலே
அன்றி!

வரம்பேதும் இல்லை வயதிற்கு;
மூட்டுக்கு
முடிச்சி விழும்
வரை!

இல்லாத செல்வத்தால்
பொல்லாத வறுமை;
இப்போது
அழுதாலும் கவலையில்லை
மழையோடு சேர்ந்து
மறைந்துவிடுமென்று!

கனவேதும் பெரியதில்லை
ஒருநாள் உழைத்ததைக் கொண்டு
மறுநாளும் உண்ண வேண்டும்;
தினக்கூலி என்றப் பெயர் மாறவேண்டும்!