பொறையேறும் போது..



மெத்தையில் இருந்தாலும்
ஒத்தையாக நான்;
குளுக்குளு அறையில் இருந்துக்கொண்டே
குமுறிக்கொண்டிருக்கும் உள்ளம் மட்டும்!

கண்ணைத் திறந்துக்கொண்டேக்
கண்காணாத் தேசத்தில்;
விழிமுழுவதும் நீரோடு - உன்னை
விழிக்காண்பது எப்போது!

வருந்தாத நாளில்லை
வருமானத்தில் ஏற்றமில்லை;
வயசுள்ள காலமெல்லாம் பாலையோடு
வயசான காலத்தில் உன்னோடு!

பொய்யெனத் தெரிந்தாலும்
பொறையேறும் போது நினைத்துக்கொள்வேன்
உன் நினைவுதான் என்று!

சின்னச் சின்னச் சந்தோஷத்தோடு
சீக்கிரம் முடிந்திடாதா என் பாலை நாள்;
எதிர்பார்துக்கொண்டே இருக்கிறேன்
எப்போது நான் உன்னோடு வாழும் நாள்!!



மெத்தையில் இருந்தாலும்
ஒத்தையாக நான்;
குளுக்குளு அறையில் இருந்துக்கொண்டே
குமுறிக்கொண்டிருக்கும் உள்ளம் மட்டும்!

கண்ணைத் திறந்துக்கொண்டேக்
கண்காணாத் தேசத்தில்;
விழிமுழுவதும் நீரோடு - உன்னை
விழிக்காண்பது எப்போது!

வருந்தாத நாளில்லை
வருமானத்தில் ஏற்றமில்லை;
வயசுள்ள காலமெல்லாம் பாலையோடு
வயசான காலத்தில் உன்னோடு!

பொய்யெனத் தெரிந்தாலும்
பொறையேறும் போது நினைத்துக்கொள்வேன்
உன் நினைவுதான் என்று!

சின்னச் சின்னச் சந்தோஷத்தோடு
சீக்கிரம் முடிந்திடாதா என் பாலை நாள்;
எதிர்பார்துக்கொண்டே இருக்கிறேன்
எப்போது நான் உன்னோடு வாழும் நாள்!!

No comments:

Post a Comment