விடமாட்டேன்..



நாட்டிற்கு நீ வந்தாலும்
வாட்டமாய் என் முகம்;
உன்னிடம் ஓட்ட முடியாமல்
ஒதிங்கி நிற்பேன்;
உன்னை ஒட்டியிருக்கும்
உறவினர்களால்! 

ஓரக் கண்ணில் நீ
பார்த்ததும் 
ஈரம் பூக்கும் என்
விழிகள்!
புன்னைகைக்கும் என்
உதடுகள்!

களையிழந்த  நான் 
ஒளிருவேன் உனக்காக
ஒரு மாதம் மட்டும்!

வெறுத்துப் போகும்
உன் நண்பர்களைக் கண்டு;
கொத்த்திச் செல்வார்கள்;
உன்னைக் கொத்தாக
கொண்டுச் செல்வார்கள்!

ஓடும் நாட்களை
உன்னோடு கழிக்க
என்னோடு இரு;
பேசாவிட்டாலும்
பார்த்துக் கொண்டிரு!

எனக்கான மாதம்
உன் விடுமுறையை
விட்டுக்கொடுக்க மாட்டேன்;
என்னை  விட்டுவிலக
விடமாட்டேன்!


நாட்டிற்கு நீ வந்தாலும்
வாட்டமாய் என் முகம்;
உன்னிடம் ஓட்ட முடியாமல்
ஒதிங்கி நிற்பேன்;
உன்னை ஒட்டியிருக்கும்
உறவினர்களால்! 

ஓரக் கண்ணில் நீ
பார்த்ததும் 
ஈரம் பூக்கும் என்
விழிகள்!
புன்னைகைக்கும் என்
உதடுகள்!

களையிழந்த  நான் 
ஒளிருவேன் உனக்காக
ஒரு மாதம் மட்டும்!

வெறுத்துப் போகும்
உன் நண்பர்களைக் கண்டு;
கொத்த்திச் செல்வார்கள்;
உன்னைக் கொத்தாக
கொண்டுச் செல்வார்கள்!

ஓடும் நாட்களை
உன்னோடு கழிக்க
என்னோடு இரு;
பேசாவிட்டாலும்
பார்த்துக் கொண்டிரு!

எனக்கான மாதம்
உன் விடுமுறையை
விட்டுக்கொடுக்க மாட்டேன்;
என்னை  விட்டுவிலக
விடமாட்டேன்!

1 comment:

  1. அன்புக்காக் எங்கும் வலி தெரிகிறது.........பார்த்து கொள்ள வேண்டிய து அவர்கள் பொறுப்பு

    ReplyDelete