அன்புள்ள அத்தாவிற்கு..



காற்றில் பறந்தக்
காலத்தைப் பிடிக்க முடியாமல்;
படிக்க முடியாக்
காலத்தை எண்ணிப்
படித்துக் கொண்டிருக்கிறேன்
அனுபவமாக!

முரட்டுக் குரலில்
விரட்டுவீர்கள் என்னை;
பற்றிப்பிடித்த அம்மாவின்
முந்தாணைக் கவசமாக
என் முன்னால்!

வருடத்திற்கு ஒரு முறை
உங்கள் வசந்தம் நாட்டிற்கென்றாலும்
பாரமாக இருக்கும்;
படிக்கச் சொல்வதினால்!

படிக்காத எனைத்
துரத்தித் துரத்தி அடித்ததினால்;
பிடிக்காமல் போனது
படிப்போடு உங்களையும்!

தோளுக்கு மேல் வளர்ந்ததால்
காதுக்கொடுத்துக் கேட்கமாட்டேன்
உங்கள் குரலோசையை!

அதட்டினாலும் அலட்சியம் செய்து
மிரட்டினாலும் முறைத்துவிட்டு;
திமிர் கொண்ட சிரிப்பால்
திரும்பாமல் நடப்பேன்!

கையில் பிடித்தக்
கடவுச் சீட்டுடன்
காலரைத் தூக்கி
மிடுக்கு நடையுடன்
கடல் கடந்துக் கால்பதித்தேன்
வெளிநாட்டில்!

கலங்கியக் கண்ணீரை
கரம் துடைத்து;
மனம் புடைத்து;
வென்று ஒரு முறை
அழுதேன் உங்களை அழைத்து!

இல்லாக் கல்வியால்
சொல்லாத் துயரம்;
வயதை விதைத்து
வாலிபத்தை அறுவடைச் செய்யும்;
நவீன உலகம்!

புரிந்துப் போனது
வரிந்துக்கொண்டு என்னை
விரட்டியதற்கானக் மூலக்காரணி!

பதிக்காதப் புத்தகத்தில்
பதக்கம் கொண்டு
இதயத்தில் புதைத்துவிட்டேன்;
வரிகளை வைரமாக்கி
வாழ்த்துக்கள் உங்களுக்கு
சுயநலமில்லாச் சுத்தமானத் தியாகி!


காற்றில் பறந்தக்
காலத்தைப் பிடிக்க முடியாமல்;
படிக்க முடியாக்
காலத்தை எண்ணிப்
படித்துக் கொண்டிருக்கிறேன்
அனுபவமாக!

முரட்டுக் குரலில்
விரட்டுவீர்கள் என்னை;
பற்றிப்பிடித்த அம்மாவின்
முந்தாணைக் கவசமாக
என் முன்னால்!

வருடத்திற்கு ஒரு முறை
உங்கள் வசந்தம் நாட்டிற்கென்றாலும்
பாரமாக இருக்கும்;
படிக்கச் சொல்வதினால்!

படிக்காத எனைத்
துரத்தித் துரத்தி அடித்ததினால்;
பிடிக்காமல் போனது
படிப்போடு உங்களையும்!

தோளுக்கு மேல் வளர்ந்ததால்
காதுக்கொடுத்துக் கேட்கமாட்டேன்
உங்கள் குரலோசையை!

அதட்டினாலும் அலட்சியம் செய்து
மிரட்டினாலும் முறைத்துவிட்டு;
திமிர் கொண்ட சிரிப்பால்
திரும்பாமல் நடப்பேன்!

கையில் பிடித்தக்
கடவுச் சீட்டுடன்
காலரைத் தூக்கி
மிடுக்கு நடையுடன்
கடல் கடந்துக் கால்பதித்தேன்
வெளிநாட்டில்!

கலங்கியக் கண்ணீரை
கரம் துடைத்து;
மனம் புடைத்து;
வென்று ஒரு முறை
அழுதேன் உங்களை அழைத்து!

இல்லாக் கல்வியால்
சொல்லாத் துயரம்;
வயதை விதைத்து
வாலிபத்தை அறுவடைச் செய்யும்;
நவீன உலகம்!

புரிந்துப் போனது
வரிந்துக்கொண்டு என்னை
விரட்டியதற்கானக் மூலக்காரணி!

பதிக்காதப் புத்தகத்தில்
பதக்கம் கொண்டு
இதயத்தில் புதைத்துவிட்டேன்;
வரிகளை வைரமாக்கி
வாழ்த்துக்கள் உங்களுக்கு
சுயநலமில்லாச் சுத்தமானத் தியாகி!

1 comment:

  1. கருத்து சொல்ல வார்த்தைகளை தேடி கொண்டே இருக்கிறேன்......! அற்புதம் !!

    ReplyDelete