சராசரி...


மணம் கொண்ட
மழலையிலும்
முகம் சுளிப்பேன்;
அப்பிக்கொண்டக் கறுப்பால்;
அழுது அடம்பிடிப்பேன்;
அன்னையிடம்!

தோல் கொண்டக் நிறத்தால்
துவண்டுப்போகும் என் தோள்கள்;
வெள்ளைத் தோலைக் கண்டுக்
கொள்ளைப் போகும் மனம்;
பொங்கி வரும் அழுகையைப்
பொத்திக்கொள்வேன் தினம்!

ஆறுதல் சொல்லி
அன்னை அணைத்துக்கொண்டுக்
கதைப்பாள்;
அழகுச் செல்லம் நீதான் என்று
ஆணியாய் மனதில் அடிப்பாள்!

தாழ்வாய் போன
மனப்பான்மையால்;
தயங்கித் தயங்கியேச் செய்வேன்;
வெள்ளைக் கூட்டம் என்றாள்
வெறுத்து வெளியேச் செல்வேன்!

கட்டிப்பிடிக்கும் உறவினர்களும்
கறுப்பன் என்றேச் சொல்லி;
சிரித்துக் கொண்டே என்னைச்
கிள்ளிவிட்டுச் செல்வர்;

அழுது அழுதுப்
புலம்பிய நாட்கள்;
ஆழமாய் மனதில் புதைந்ததால்;
அடுத்தக்கட்ட முடிவாய்
எதிர்த்து நிற்கத் துணிந்தேன்!

எதிர்ப்பைத் தாங்கும்
சக்தி எனக்கே என்று;
முழங்கினேன்;
மெலோனின் என்று
புரியாதப் பாஷையால் விளக்கினேன்!

கருமைக் கொண்டச் சிகையும்;
வண்ணம் தீட்டும் மையும்;
அழகு என்றேக் கூவினேன்;
வாய்கொடுத்து வாங்கிக் கட்டியவர்களிடம்
வார்த்தை ஜாலம் காட்டினேன்!

எல்லாம் செய்து
அம்மா காதில் ஓதினேன்;
வெண்மைக் கொண்டப் பெண்மையைத்
தேடிப்பிடிக்கச் சொல்லினேன்;
அதிசயமாய் பார்த்த அன்னையிடம்
வெள்ளைப் பற்களைக் காட்டினேன்!

மணம் கொண்ட
மழலையிலும்
முகம் சுளிப்பேன்;
அப்பிக்கொண்டக் கறுப்பால்;
அழுது அடம்பிடிப்பேன்;
அன்னையிடம்!

தோல் கொண்டக் நிறத்தால்
துவண்டுப்போகும் என் தோள்கள்;
வெள்ளைத் தோலைக் கண்டுக்
கொள்ளைப் போகும் மனம்;
பொங்கி வரும் அழுகையைப்
பொத்திக்கொள்வேன் தினம்!

ஆறுதல் சொல்லி
அன்னை அணைத்துக்கொண்டுக்
கதைப்பாள்;
அழகுச் செல்லம் நீதான் என்று
ஆணியாய் மனதில் அடிப்பாள்!

தாழ்வாய் போன
மனப்பான்மையால்;
தயங்கித் தயங்கியேச் செய்வேன்;
வெள்ளைக் கூட்டம் என்றாள்
வெறுத்து வெளியேச் செல்வேன்!

கட்டிப்பிடிக்கும் உறவினர்களும்
கறுப்பன் என்றேச் சொல்லி;
சிரித்துக் கொண்டே என்னைச்
கிள்ளிவிட்டுச் செல்வர்;

அழுது அழுதுப்
புலம்பிய நாட்கள்;
ஆழமாய் மனதில் புதைந்ததால்;
அடுத்தக்கட்ட முடிவாய்
எதிர்த்து நிற்கத் துணிந்தேன்!

எதிர்ப்பைத் தாங்கும்
சக்தி எனக்கே என்று;
முழங்கினேன்;
மெலோனின் என்று
புரியாதப் பாஷையால் விளக்கினேன்!

கருமைக் கொண்டச் சிகையும்;
வண்ணம் தீட்டும் மையும்;
அழகு என்றேக் கூவினேன்;
வாய்கொடுத்து வாங்கிக் கட்டியவர்களிடம்
வார்த்தை ஜாலம் காட்டினேன்!

எல்லாம் செய்து
அம்மா காதில் ஓதினேன்;
வெண்மைக் கொண்டப் பெண்மையைத்
தேடிப்பிடிக்கச் சொல்லினேன்;
அதிசயமாய் பார்த்த அன்னையிடம்
வெள்ளைப் பற்களைக் காட்டினேன்!

1 comment:

  1. கடைசி வரிகள் சிரிக்க வைத்து விட்டன.. உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை..நான் மெய் மறந்து சில கவிதைகளில் அழுதும் இருக்கிறேன்.. நான் உங்கள் விசிறி ஆகிவிட்டேன் சகோதரரே..

    ReplyDelete