அன்புள்ள மகனுக்கு..


பருவத்தில் மறுத்துவிட்டப்
பள்ளிச் சீருடையால்;
வயதுக் கடந்து
வளைகுடாவில்
உடமையான உடை!

புதிய ஆடைகள்
உன் மேனியை
மணக்கச் செய்ய;
கம கமக்கும்
ஈர வியர்வை ஆடை
தினமும்!

நமக்கென்றுத் தனிவீட்டில்
உனக்கு ஒரு அறை எழுப்ப;
ஒரு அறையே வீடாக்கி;
அறியாதவர்களுடன்
நான் இங்கே!

கண்டிப்புகள் கசப்பாய்;
கொஞ்சம் வெறுப்பாய்;
உண்மை நெருப்பாய்
தோன்றுகிறதா;

என் தந்தை
விசும்பல் இப்போதுதான்;
இதயத்தில் இறுக்கமாய் எனக்கு;
மீண்டும் ஒரு சந்தர்பம்
வேண்டாம் உனக்கு!

பருவத்தில் மறுத்துவிட்டப்
பள்ளிச் சீருடையால்;
வயதுக் கடந்து
வளைகுடாவில்
உடமையான உடை!

புதிய ஆடைகள்
உன் மேனியை
மணக்கச் செய்ய;
கம கமக்கும்
ஈர வியர்வை ஆடை
தினமும்!

நமக்கென்றுத் தனிவீட்டில்
உனக்கு ஒரு அறை எழுப்ப;
ஒரு அறையே வீடாக்கி;
அறியாதவர்களுடன்
நான் இங்கே!

கண்டிப்புகள் கசப்பாய்;
கொஞ்சம் வெறுப்பாய்;
உண்மை நெருப்பாய்
தோன்றுகிறதா;

என் தந்தை
விசும்பல் இப்போதுதான்;
இதயத்தில் இறுக்கமாய் எனக்கு;
மீண்டும் ஒரு சந்தர்பம்
வேண்டாம் உனக்கு!

1 comment:

  1. வளைகுடா வாழ்கையின் எதார்த்தம் உங்கள் வரிகளில்.
    வாலிபத்தை அடகுவைத்து வாழும் வளைகுடா வாழ்கை ஒரு சாபக்கேடு.

    ReplyDelete