பொய் சொல்லலாம்...


பாசத்தைப் பிழிந்துச்;
சமையல் நீ செய்ய;
சொல்பேச்சிக் கேட்காமல்
புளிப்பும் உப்பும்;
சுவையைக் கூட்ட;
சினத்தை என் முகத்தில்
காட்டாமல்;
சிரித்துக்கொண்டேச்
சொல்லலாம் பொய்;
நல்லாயிருக்கு என்று!

பிடிக்காத வண்ணத்தில்;
உனக்குப் பிடித்த
எண்ணத்தில் சட்டையை
என் நெஞ்சில் ஒற்றி;
அழகாயிருக்குல்ல எனும்போது;
சிரித்துக்கொண்டேச்
சொல்லலாம் பொய்;
நல்லாயிருக்கு என்று!

முன்பே
முடிவெடுத்துவிட்டு;
ஒப்புக்காக என் பதிலை
நீ கேட்கும் போது;
சிரித்துக்கொண்டேச்
சொல்லலாம் பொய்;
சரிதான் என்று!

எனக்காகவே
என்னோடு நீ
ஒட்டியிருக்கும் போது;
உனக்காக;
உதடுகளைப் பிரிப்பதில்
தவறில்லை;
பொய்யென்றாலும்!

பாசத்தைப் பிழிந்துச்;
சமையல் நீ செய்ய;
சொல்பேச்சிக் கேட்காமல்
புளிப்பும் உப்பும்;
சுவையைக் கூட்ட;
சினத்தை என் முகத்தில்
காட்டாமல்;
சிரித்துக்கொண்டேச்
சொல்லலாம் பொய்;
நல்லாயிருக்கு என்று!

பிடிக்காத வண்ணத்தில்;
உனக்குப் பிடித்த
எண்ணத்தில் சட்டையை
என் நெஞ்சில் ஒற்றி;
அழகாயிருக்குல்ல எனும்போது;
சிரித்துக்கொண்டேச்
சொல்லலாம் பொய்;
நல்லாயிருக்கு என்று!

முன்பே
முடிவெடுத்துவிட்டு;
ஒப்புக்காக என் பதிலை
நீ கேட்கும் போது;
சிரித்துக்கொண்டேச்
சொல்லலாம் பொய்;
சரிதான் என்று!

எனக்காகவே
என்னோடு நீ
ஒட்டியிருக்கும் போது;
உனக்காக;
உதடுகளைப் பிரிப்பதில்
தவறில்லை;
பொய்யென்றாலும்!

1 comment:

  1. பொய்குறித்து
    வள்ளுவன் சொல்லியுள்ளதை
    இந்த கவிதை நினைவுறுத்திப் போகிறது
    தொடர வாழ்துக்கள்

    ReplyDelete