மன்னித்துவிடு


கறுத்த முடிகள்
நகைத்து வெளுத்து;
திமிர் கொண்டத் தோள்கள்
தளர்ந்துத் துவண்டு;
பளப்பளத்தத் தோல்கள்
பள்ளம் மேடுக் காட்சியோடு!

என்னோடு நீ
கழித்தக் காலம்;
எத்தனையோ முறை
உன் மனதை நான்
கிழித்தக் கோலம்;
நான் இழைத்தப் பிழைக்கு;
நீ கேட்ட மன்னிப்புகள்;
திரும்பிப் பார்த்தாலேத் 
திகைப்பாய்;
விழிகளுக்கு மலைப்பாய்!

வெட்கிக் குனிகிறேன்
வேதனையில்;
கர்வம் துடைத்து;
விழிகளால் விழைந்து;
மனதால் அழுது;
மன்னிப்புக்கேட்கிறேன்;
மணம் முடிக்க
மணக்கூலிக் கேட்டு
உறவை மாசுப்படுத்தியதற்கு;
அன்று நான்
உன் விழிகளைத்
தூசுத் தட்டியதற்கு!

கறுத்த முடிகள்
நகைத்து வெளுத்து;
திமிர் கொண்டத் தோள்கள்
தளர்ந்துத் துவண்டு;
பளப்பளத்தத் தோல்கள்
பள்ளம் மேடுக் காட்சியோடு!

என்னோடு நீ
கழித்தக் காலம்;
எத்தனையோ முறை
உன் மனதை நான்
கிழித்தக் கோலம்;
நான் இழைத்தப் பிழைக்கு;
நீ கேட்ட மன்னிப்புகள்;
திரும்பிப் பார்த்தாலேத் 
திகைப்பாய்;
விழிகளுக்கு மலைப்பாய்!

வெட்கிக் குனிகிறேன்
வேதனையில்;
கர்வம் துடைத்து;
விழிகளால் விழைந்து;
மனதால் அழுது;
மன்னிப்புக்கேட்கிறேன்;
மணம் முடிக்க
மணக்கூலிக் கேட்டு
உறவை மாசுப்படுத்தியதற்கு;
அன்று நான்
உன் விழிகளைத்
தூசுத் தட்டியதற்கு!

ஊனமான உணர்வுகள்


உணர்வுகள் வெறிப்பிடித்து;
உயிர்களைத் தினம் குடித்து;
கர்பிணியின் கருவறுத்து;
ஊடகங்கள் வாயடைத்து;
எரித்து அழித்துக் கொன்ற
இனம் மண்ணுக்குள் மக்கி!

குரோதத்திற்கு வழிக்கொடுத்து;
கலவரத்திற்கு இடம் கொடுத்து;
ஆட்சிக்குள் ஒளிந்து;
இரத்த வேட்கைக் கொண்டு
நரபலிகேட்கும் மோடி;
தலையெடுக்கத் தலையசைத்த
தலைமையில் உள்ள பேடி!

இனம் காக்க;
குருதிக் கொதிக்க;
குரல் கொடுக்க;
தேசம் தாண்டிப்
பாசம் காட்டும்
என் சமுதாயமே;
ஒரு தேசத்தில் இருந்து;
தட்டிக்கேட்கத் துணிவில்லாமல்
தலைக்குனிந்து நீ ஊமையாகி;
மனம் ஊனமானதேனோ!

உணர்வுகள் வெறிப்பிடித்து;
உயிர்களைத் தினம் குடித்து;
கர்பிணியின் கருவறுத்து;
ஊடகங்கள் வாயடைத்து;
எரித்து அழித்துக் கொன்ற
இனம் மண்ணுக்குள் மக்கி!

குரோதத்திற்கு வழிக்கொடுத்து;
கலவரத்திற்கு இடம் கொடுத்து;
ஆட்சிக்குள் ஒளிந்து;
இரத்த வேட்கைக் கொண்டு
நரபலிகேட்கும் மோடி;
தலையெடுக்கத் தலையசைத்த
தலைமையில் உள்ள பேடி!

இனம் காக்க;
குருதிக் கொதிக்க;
குரல் கொடுக்க;
தேசம் தாண்டிப்
பாசம் காட்டும்
என் சமுதாயமே;
ஒரு தேசத்தில் இருந்து;
தட்டிக்கேட்கத் துணிவில்லாமல்
தலைக்குனிந்து நீ ஊமையாகி;
மனம் ஊனமானதேனோ!

யார் தீவிரவாதி


சின்னச் சிரிப்போடு;
மெல்லிய அச்சத்தோடு;
உதடுகள் உதித்தது;
யூத குழந்தைக்கு;
அணுதினமும் உரைப்பார்
என் அப்பா;
பாலஸ்தீனியர்கள்
பயங்கரவாதிகள் என!

ஏக்கத்தோடு;
முக வாட்டத்தோடு;
உடைந்த குரலோடு;
வெடித்த உதடுகளுடன்
பாலஸ்தீனியக் குழந்தை;
உரைத்தது;

ஒருபோதும் சொன்னதில்லை
என் அப்பா;
ஏனெனில் அவ்வாறுச் சொல்ல
என் அப்பாவை உயிரோடு
விட்டு வைக்கவில்லை;
உங்கள் நாட்டின் அப்பாக்கள்!

சின்னச் சிரிப்போடு;
மெல்லிய அச்சத்தோடு;
உதடுகள் உதித்தது;
யூத குழந்தைக்கு;
அணுதினமும் உரைப்பார்
என் அப்பா;
பாலஸ்தீனியர்கள்
பயங்கரவாதிகள் என!

ஏக்கத்தோடு;
முக வாட்டத்தோடு;
உடைந்த குரலோடு;
வெடித்த உதடுகளுடன்
பாலஸ்தீனியக் குழந்தை;
உரைத்தது;

ஒருபோதும் சொன்னதில்லை
என் அப்பா;
ஏனெனில் அவ்வாறுச் சொல்ல
என் அப்பாவை உயிரோடு
விட்டு வைக்கவில்லை;
உங்கள் நாட்டின் அப்பாக்கள்!

சத்தியமார்க்கம்


இறைத்தந்த அருள்மறையுண்டு;
அதில் அருமருந்து உண்டு;
இறை நபி வழிமுறைக்கொண்டு;
வாழ்விற்கு அழகான நெறிமுறையுண்டு!

வன்மைக்கொண்ட உள்ளமும்
மென்மைக் கொண்டுச் சூழும்;
வெண்மைக் கொடிப்பூக்கும்;
இஸ்லாம் என்றால் மணக்கும்!

கறை மிகுந்தச் சிந்தைக்கு;
திரையிட்டுத் தடையிட்ட மார்க்கம்
தீவிரவாதத்தைத் திறந்திடுமா;
தீவிரமாய் நீ சிந்திக்க வேண்டாமா!

கருணைப் பொழிவதை நன்மை
கணக்கில் சேர்க்கும் சத்தியமார்க்கம்
முரணாகுமா - இல்லை
மனிதக்குலத்திற்கு அரணாகுமா;
இவை உனக்கு புரிந்திட வேண்டாமா!

இறைத்தந்த அருள்மறையுண்டு;
அதில் அருமருந்து உண்டு;
இறை நபி வழிமுறைக்கொண்டு;
வாழ்விற்கு அழகான நெறிமுறையுண்டு!

வன்மைக்கொண்ட உள்ளமும்
மென்மைக் கொண்டுச் சூழும்;
வெண்மைக் கொடிப்பூக்கும்;
இஸ்லாம் என்றால் மணக்கும்!

கறை மிகுந்தச் சிந்தைக்கு;
திரையிட்டுத் தடையிட்ட மார்க்கம்
தீவிரவாதத்தைத் திறந்திடுமா;
தீவிரமாய் நீ சிந்திக்க வேண்டாமா!

கருணைப் பொழிவதை நன்மை
கணக்கில் சேர்க்கும் சத்தியமார்க்கம்
முரணாகுமா - இல்லை
மனிதக்குலத்திற்கு அரணாகுமா;
இவை உனக்கு புரிந்திட வேண்டாமா!

கவிதை 500


நேரத்தைத் தின்று வடித்த
தடித்த வரிகளுக்கு வடிகாலிட்டு;
எழுத்துப்பிழைக் கொண்டாலும்;
கருத்துப்பிழையைக் கொன்று;
செல்கள் சிலிர்த்துக்
கொட்டிய வரிகளும்;
உள்ளம் கொதித்து
உதிர்ந்த வலிகளும்;
முற்றிப்போய்
முணகலோடுப் பிரசவமாகி
ஐந்நூறாவதுக் கவிதையாக!

விதைத்த வரிகள்
திரும்பிப்பார்க்கும் போது
திகைப்பாய்;
இனி விதைக்கப்போவதை
முன்னோக்கும் போது
மலைப்பாய்;
மெய் மட்டுமே சுமந்து;
பொய்யைக்
கருத்தடைச் செய்ய;
அச்சத்துடன் அடுத்தக்
கவிதைக்காக!

நேரத்தைத் தின்று வடித்த
தடித்த வரிகளுக்கு வடிகாலிட்டு;
எழுத்துப்பிழைக் கொண்டாலும்;
கருத்துப்பிழையைக் கொன்று;
செல்கள் சிலிர்த்துக்
கொட்டிய வரிகளும்;
உள்ளம் கொதித்து
உதிர்ந்த வலிகளும்;
முற்றிப்போய்
முணகலோடுப் பிரசவமாகி
ஐந்நூறாவதுக் கவிதையாக!

விதைத்த வரிகள்
திரும்பிப்பார்க்கும் போது
திகைப்பாய்;
இனி விதைக்கப்போவதை
முன்னோக்கும் போது
மலைப்பாய்;
மெய் மட்டுமே சுமந்து;
பொய்யைக்
கருத்தடைச் செய்ய;
அச்சத்துடன் அடுத்தக்
கவிதைக்காக!

வியாபாரத் தினம்




அன்பே ஆருயிரே
வர்ணனைகள் லயிக்கும்;
அன்னைத் தந்தைப் பாசம்
பரணையில் கிடக்கும்;
இச்சைக் கொண்ட
உணர்வுகள்;
எச்சில் சொட்ட உரைக்கும்;
சின்னச் சின்னத்
தொடுதலும்;
சிலிர்ப்புக் கொடுக்கும்
உரசலும்;
காதல் என்றே உரைக்கும்;
காமம் என்பதை மறைக்கும்!



அன்பே ஆருயிரே
வர்ணனைகள் லயிக்கும்;
அன்னைத் தந்தைப் பாசம்
பரணையில் கிடக்கும்;
இச்சைக் கொண்ட
உணர்வுகள்;
எச்சில் சொட்ட உரைக்கும்;
சின்னச் சின்னத்
தொடுதலும்;
சிலிர்ப்புக் கொடுக்கும்
உரசலும்;
காதல் என்றே உரைக்கும்;
காமம் என்பதை மறைக்கும்!

தனிமை வீடு


துவண்டுப்போனச்
செல்களும்
சிலிர்த்து நிற்கும்;
எனை நீ வயிற்றில்
உதைத்தத் தருணம்;

கலங்கியக் கண்ணீர்
காதை நிரப்ப;
உறவுகள் ஆறுதல்
உரைக்க;
மருத்துவமனையில் நான்!

மரணமோ எனை;
வலியால் மிரட்ட;
யார் என அறியாத
மகப்பேறு மருத்துவர்கள்;
உன் வரவுக்காக
என் வழித்தடத்தை நோக்க;
வெட்கம் எனைக் கொல்ல;
உனக்காகதான் என
அழுகையால் எனக்கே
ஆறுதல் தழுவ;
அழகாய் நீ என் பக்கத்தில்
நான் மயக்கத்தில்!

கணக்கில்லா
முத்தத்தோடு வளர்ந்த நீ;
கணக்குப்பார்த்து எங்கள்
கணக்கை முடிக்க;
இன்று முதியோர் இல்லத்தில்
நானும் உன் தகப்பனும்!

அழுகை நேரம் போக;
உள்ளம் உனைதான் தேடும்;
உண்டாயா உறங்கினாயா என்று!

தலைப்புத் தந்தவர்:
SABITHA - TAMILNADU

துவண்டுப்போனச்
செல்களும்
சிலிர்த்து நிற்கும்;
எனை நீ வயிற்றில்
உதைத்தத் தருணம்;

கலங்கியக் கண்ணீர்
காதை நிரப்ப;
உறவுகள் ஆறுதல்
உரைக்க;
மருத்துவமனையில் நான்!

மரணமோ எனை;
வலியால் மிரட்ட;
யார் என அறியாத
மகப்பேறு மருத்துவர்கள்;
உன் வரவுக்காக
என் வழித்தடத்தை நோக்க;
வெட்கம் எனைக் கொல்ல;
உனக்காகதான் என
அழுகையால் எனக்கே
ஆறுதல் தழுவ;
அழகாய் நீ என் பக்கத்தில்
நான் மயக்கத்தில்!

கணக்கில்லா
முத்தத்தோடு வளர்ந்த நீ;
கணக்குப்பார்த்து எங்கள்
கணக்கை முடிக்க;
இன்று முதியோர் இல்லத்தில்
நானும் உன் தகப்பனும்!

அழுகை நேரம் போக;
உள்ளம் உனைதான் தேடும்;
உண்டாயா உறங்கினாயா என்று!

தலைப்புத் தந்தவர்:
SABITHA - TAMILNADU