பொய்யென்று தெரிந்தும்


மணம் மங்கா
மணவறை ஆடை
அலமாரியில்;

இருட்டில் வாசம்பிடித்த
மருதாணி கோலம்
இன்னும் பளிச்சென்று;

நேருக்கு நேர்
என் முகம் காணா
உன் வெட்கப்பட்ட விழிகள்;

மாதத்திற்குள்ளே மணவாழ்க்கைக் கொண்டாடும்
விதி விலக்கில்லா வெளிநாட்டு மாப்பிள்ளைகளில்;
நானும் எண்ணை தேசத்திற்கு..

பொய்யென்று தெரிந்தும்;
அழுது வடியும்
உன் கண்களுக்கு
அழுதுக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்
இன்னும் கொஞ்ச நாள்தான்…



மணம் மங்கா
மணவறை ஆடை
அலமாரியில்;

இருட்டில் வாசம்பிடித்த
மருதாணி கோலம்
இன்னும் பளிச்சென்று;

நேருக்கு நேர்
என் முகம் காணா
உன் வெட்கப்பட்ட விழிகள்;

மாதத்திற்குள்ளே மணவாழ்க்கைக் கொண்டாடும்
விதி விலக்கில்லா வெளிநாட்டு மாப்பிள்ளைகளில்;
நானும் எண்ணை தேசத்திற்கு..

பொய்யென்று தெரிந்தும்;
அழுது வடியும்
உன் கண்களுக்கு
அழுதுக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்
இன்னும் கொஞ்ச நாள்தான்…


2 comments: