அழுக்கு ஆடையும்
எண்ணை வழிந்த முகமும்;
சீவாத சிகையும்
சிரிப்பை உதிக்காத உதடும்;
குடிலில் குடும்பத்தோடு
கணவனும் மனைவியும்!
புறம் செல்ல விருந்தோ;
உறவினரைக் காண
புறமோ சென்றால்;
அழுது வடியும் முகமும்
நெடியேற்றும்
வாசனைத் திரவியமும்;
புத்தம் புது ஆடைகளோடு
பூப்பறிக்கும்!
உடையவருக்கு
காட்ட வேண்டிய
அழகை ஊருக்கும்;
ஊருக்கு காட்டக்கூடாத
தோரணையை உடையவருக்கும்!
எடுத்துச் சொல்ல
எவருமில்லை;
சொல்லிக் கொடுத்தாலும்
புரிவதில்லை;
அடுத்தென்ன நடக்குமென்று
அய்யகோ
உங்களுக்கு விளங்கவில்லை!
வலிமையிழந்த மானுடமே
வழிக்கெட்டுப் போகும்;
விழித் தடுமாறி நோக்கும்;
குரங்காய் இருந்தாலும்
மனம் கும்மாளம் போடும்;
அவனோ அவளோ;
ஆளுக்கொருவர்
ஆடையாய் இருங்கள்;
கந்தலாகிப் போனால்
கரித் துணியாக
கடைசியில்!!
No comments:
Post a Comment